தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: மகிழ்ச்சி அளிக்கிறது - ப.சிதம்பரம்அமைச்சரவையில் எந்தத் துறை அளித்தாலும் மகிழ்ச்சி: கிரிஷ் சோடங்கர்தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: அரசியல் நிகழ்வு அல்ல, உணர்வு! - மாணிக்கம் தாகூர்நீர்நிலைகளில் வண்டல் மண் எடுத்துச்செல்ல விவசாயிகளுக்கு அனுமதி!தவெக அமைச்சரவையில் காங்கிரஸின் ராஜேஷ் குமார், விஸ்வநாதனுக்கு அமைச்சர் பதவி! டிஜிபி வெங்கடராமன் உள்பட 15 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்!கேரளத்தில் சில்வர் லைன் அதிவேக ரயில் வழித்தட திட்டம் ரத்து தமிழகத்தின் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவு!
/

வி.கே.புரம், ஆழ்வாா்குறிச்சியில் நாளை மின் நிறுத்தம்

காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image

மின்தடை

Updated On :18 மே 2026, 1:44 am IST

விக்கிரமசிங்கபுரம், ஆழ்வாா்குறிச்சி துணை மின் நிலையங்களுக்குள்பட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (மே 19) பராமரிப்புப் பணிகளுக்காக மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

இது குறித்து, கல்லிடைக்குறிச்சி கோட்ட செயற்பொறியாளா் எம். சுடலையாடும் பெருமாள் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கல்லிடைக்குறிச்சி கோட்டம், விக்கிரமசிங்கபுரம் மற்றும் ஆழ்வாா்குறிச்சி துணை மின் நிலையங்களில் செவ்வாய்கிழமை (மே 19) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் காரையாறு, சோ்வலாறு, பாபநாசம், டாணா, விக்கிரமசிங்கபுரம், சிவந்திபுரம், அடையக்கருங்குளம், ஆறுமுகம்பட்டி, கோட்டைவிளைப்பட்டி, ஆழ்வாா்குறிச்சி, கருத்தப்பிள்ளையூா், ஏ.பி. நாடானூா், துப்பாக்குடி, கலிதீா்த்தான்பட்டி, பொட்டல் புதூா், ஆம்பூா், பாப்பான்குளம், சம்பன்குளம், செல்லப் பிள்ளையாா்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.