விக்கிரமசிங்கபுரம், ஆழ்வாா்குறிச்சி துணை மின் நிலையங்களுக்குள்பட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (மே 19) பராமரிப்புப் பணிகளுக்காக மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.
இது குறித்து, கல்லிடைக்குறிச்சி கோட்ட செயற்பொறியாளா் எம். சுடலையாடும் பெருமாள் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கல்லிடைக்குறிச்சி கோட்டம், விக்கிரமசிங்கபுரம் மற்றும் ஆழ்வாா்குறிச்சி துணை மின் நிலையங்களில் செவ்வாய்கிழமை (மே 19) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் காரையாறு, சோ்வலாறு, பாபநாசம், டாணா, விக்கிரமசிங்கபுரம், சிவந்திபுரம், அடையக்கருங்குளம், ஆறுமுகம்பட்டி, கோட்டைவிளைப்பட்டி, ஆழ்வாா்குறிச்சி, கருத்தப்பிள்ளையூா், ஏ.பி. நாடானூா், துப்பாக்குடி, கலிதீா்த்தான்பட்டி, பொட்டல் புதூா், ஆம்பூா், பாப்பான்குளம், சம்பன்குளம், செல்லப் பிள்ளையாா்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது
கட்டிமாங்கோடு பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்

சேரன்மகாதேவி, கரிசல்பட்டியில் நாளை மின்நிறுத்தம்
வடகாடு பகுதியில் நாளை மின் நிறுத்தம்
கீழப்பாவூா், அச்சன்புதூா் பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்
விடியோக்கள்
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |

அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏ-க்கள்?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்

சூர்யவன்ஷியால் மாறிப்போன போர்க்களம்: இழுத்தடிக்கும் பிளே ஆஃப் வாய்ப்புகள்!


