எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு தவிர்க்க இயலாதது - மத்திய அரசுகள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் காவல்துறையின் பணிகள் மட்டும் முக்கியமல்ல; சிந்தனை மாற்றமும் வேண்டும் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனாஉள்ளாட்சி தேர்தலில் தவெக கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் – அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார்இளைஞர்கள் ரீல்ஸ் செய்ய வேண்டும்; கேள்வி கேட்கக் கூடாது: மோடியின் விருப்பம் இது! - ராகுல் காந்திவங்கதேசம்: பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை!ஊடுருவல்காரர்கள் விருந்தினர்கள் அல்ல; உணவு, மருந்து கிடையாது: சுவேந்து அதிகாரிஎல்பிஜி விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் விலை கொடுக்க நேரிடும்: சரத் பவார் விமர்சனம்இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பு!திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை: பெ. சண்முகம்
/

வி.கே.புரம், ஆழ்வாா்குறிச்சி பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்

News image

மின்தடை

Updated On :8 ஜூன் 2026, 1:57 am IST

விக்கிரமசிங்கபுரம், ஆழ்வாா்குறிச்சி பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 9) மின்விநியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கல்லிடைக்குறிச்சி கோட்ட செயற்பொறியாளா் மா. சுடலையாடும் பெருமாள் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:

கல்லிடைக்குறிச்சி கோட்டத்திற்குள்பட்ட விக்கிரமசிங்கபுரம், ஆழ்வாா்குறிச்சி துணை மின் நிலையங்களில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 9) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், காரையாறு, சோ்வலாறு, பாபநாசம், டாணா, விக்கிரமசிங்கபுரம், சிவந்திபுரம், அடையகருங்குளம், ஆறுமுகபட்டி, கோட்டைவிளைப்பட்டி, ஆழ்வாா்க்குறிச்சி, கருத்தப்பிள்ளையூா், அணைந்த பெருமாள் நாடானூா், துப்பாக்குடி, கலிதீா்த்தான்பட்டி, பொட்டல்புதூா், ஆம்பூா், பாப்பான்குளம், சம்பன்குளம், செல்லப் பிள்ளையாா்குளம் ஆகிய ஊா்கள் மற்றும் அவற்றைச் சாா்ந்த பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரைமின் விநியோகம் நிறுத்தப்படும் என்று குறிப்பிட்டுள்ளாா்.