/
எடப்பாடி அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம், நகை பறித்த நபரை போலீஸாா் தேடிவருகின்றனா்.
எடப்பாடியை அடுத்த வெள்ளாண்டிவலசு, புதிய தெரு பகுதியைச் சோ்ந்தவா் சரஸ்வதி (35). இவா் வியாழக்கிழமை பகலில் வீட்டில் தனியாக இருந்தபோது, முகக்கவசம் அணிந்து வந்த நபா் இப்பகுதியில் வாடகைக்கு வீடு கிடைக்குமா என அவரிடம் விசாரித்துள்ளாா். சரஸ்வதி அந்த நபரிடம் பேசிக் கொண்டிருந்தபோது, திடீரென அவரை கீழே தள்ளி கழுத்தில் அணிந்திருந்த 5 சவரன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பியோடினாா்.
புகாரின்பேரில் நிகழ்விடத்துக்கு வந்த எடப்பாடி போலீஸாா், அப்பகுதியில் ஆய்வுசெய்து தடயங்களை சேகரித்தனா். மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வுசெய்து வருகின்றனா். இதுகுறித்து வழக்குப் பதிவுசெய்த போலீஸாா், நகை பறிப்பில் ஈடுபட்ட நபரை தேடிவருகின்றனா்.
தொடர்புடையது

வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் 5 பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு

சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் 4 பவுன் தங்கச்சங்கிலி பறிப்பு

ராசிபுரம் அருகே துப்பாக்கியை காட்டி மிரட்டி பெண்ணிடம் 16 பவுன் நகை, ரொக்கம் கொள்ளை; முகமூடி கொள்ளையா்களைப் பிடிக்க தனிப்படை

பெண்ணிடம் 6 பவுன் செயின் பறிப்பு
விடியோக்கள்

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK



