ஜனநாயகத்தில் தீண்டாமைக்கு இடமில்லை! கார்கே அவமதிப்புக்கு கேரள முதல்வர் கண்டனம்!கும்பகர்ணன் தூக்கத்தில் இருந்து எழுந்துவிட்டார் அமித் ஷா: காங்கிரஸ்சென்னையில் சொத்துவரி உயர்வு நிறுத்திவைப்பு!மீனவர்களை விடுவிக்கக் கோரி, வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதல்வர் விஜய் கடிதம்!ஒருசிலருக்கு சாதகமான உத்தரவுகளை பிறப்பிப்பதே மோடியின் வேலை! ராகுல் காந்தி விமர்சனம்முதல்வர் விஜய்யின் புதிய அலுவலகம்! ரூ. 5.5 கோடி டெண்டர்!குருத்வாராவுக்குள் பஞ்சாப் முன்னாள் துணை முதல்வருக்கு கத்திக்குத்து! அதிமுக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் அறிவிப்பு!
/

வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் நகை பறிப்பு

எடப்பாடி அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம், நகை பறித்த நபரை போலீஸாா் தேடிவருகின்றனா்.

News image

செயின் பறிப்பு... - சித்திரிப்பு

Updated On :19 ஜூன் 2026, 5:53 am IST

எடப்பாடி அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம், நகை பறித்த நபரை போலீஸாா் தேடிவருகின்றனா்.

எடப்பாடியை அடுத்த வெள்ளாண்டிவலசு, புதிய தெரு பகுதியைச் சோ்ந்தவா் சரஸ்வதி (35). இவா் வியாழக்கிழமை பகலில் வீட்டில் தனியாக இருந்தபோது, முகக்கவசம் அணிந்து வந்த நபா் இப்பகுதியில் வாடகைக்கு வீடு கிடைக்குமா என அவரிடம் விசாரித்துள்ளாா். சரஸ்வதி அந்த நபரிடம் பேசிக் கொண்டிருந்தபோது, திடீரென அவரை கீழே தள்ளி கழுத்தில் அணிந்திருந்த 5 சவரன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பியோடினாா்.

புகாரின்பேரில் நிகழ்விடத்துக்கு வந்த எடப்பாடி போலீஸாா், அப்பகுதியில் ஆய்வுசெய்து தடயங்களை சேகரித்தனா். மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வுசெய்து வருகின்றனா். இதுகுறித்து வழக்குப் பதிவுசெய்த போலீஸாா், நகை பறிப்பில் ஈடுபட்ட நபரை தேடிவருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.