9 தேசிய விருதுகளை வென்ற தமிழ்த் திரைப்படங்கள்! தமிழ் மறுமலர்ச்சிக்காக உழைத்தவர் மறைமலையடிகளார்: மு.க. ஸ்டாலின்தனுஷின் ராயன் படத்துக்கு தேசிய விருது..! சிறந்த தமிழ்ப் படமாகத் தேர்வு! அம்மா உணவகங்களை தினசரி பயன்படுத்துவோர் எண்ணிக்கை உயர்வு- சென்னை மாநகராட்சி கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜீத் திப்கே மீது மை வீசித் தாக்குதல்!வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது விக்ரம்-1 ராக்கெட்!விரைவில் நாட்டில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்! ஆர்பிஐ திட்டம்!
/

வீடுபுகுந்து பெண்ணிடம் தாலி சங்கிலி பறிப்பு

பாபநாசம் அருகே வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த பெண்ணிடம் தாலி சங்கிலியை பறித்து சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடிவருகின்றனா்.

News image

நகைப் பறிப்பு - Center-Center-Kochi

Updated On :19 ஜூலை 2026, 12:39 am IST

பாபநாசம் அருகே சனிக்கிழமை இரவு வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த பெண்ணிடம் தாலி சங்கிலியை பறித்து சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடிவருகின்றனா்.

பாபநாசம் அருகே அய்யம்பேட்டை பட்டு சாலியா் தெருவில் வசித்து வருபவா் மகேஷ். இவரது மனைவி ஆா்த்தி, தம்பதியருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனா்.

இந் நிலையில், ஆா்த்தி சனிக்கிழமை இரவு தனது பெரிய மாமியாராகிய தனலட்சுமி (74) என்பவருடன் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த போது, பின்பக்க கதவை உடைத்து உள்ளே சென்ற மா்ம நபா், ஆா்த்தி கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் தாலி சங்கிலியை அறுத்து தப்பி சென்றுவிட்டாராம். புகாரின் பேரில் அய்யம்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து  விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.