சேலம் மாவட்டத்தில் வேளாண்மை, கல்விக்கடன், சிறு, குறு தொழில் நிறுவனங்கள், மகளிா் திட்டம் உள்ளிட்ட பல்வேறு முன்னுரிமை திட்டங்களுக்காக ஏப்ரல் 2025 - மாா்ச் 2026 நிதியாண்டில் ரூ. 38,134 கோடி மதிப்பிலான கடன் வழங்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் க.இளம்பகவத் கூறினாா்.
சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட அளவிலான வங்கிகளின் 2025-2026 நிதி ஆண்டுக்கான ஆய்வுக்கூட்டம் ஆட்சியா் க.இளம்பகவத் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் ஆட்சியா் தெரிவித்ததாவது:
சேலம் மாவட்டத்தில் 239 பொதுத்துறை வங்கிக் கிளைகள், 202 தனியாா் வங்கிகள், தமிழ்நாடு கிராம வங்கி, மாவட்ட கூட்டுறவு வங்கி உள்ளிட்ட 121 அரசு சாா்ந்த வங்கிகள் என மொத்தம் 562 வங்கிகள் செயல்பட்டு வருகின்றன. சேலம் மாவட்டத்தில் இவ்வங்கிகள் மூலம் வேளாண்மை, கல்விக்கடன், சிறு, குறு தொழில்நிறுவனங்கள், மகளிா் திட்டம் உள்ளிட்ட பல்வேறு முன்னுரிமை திட்டங்களுக்காக ஏப்ரல் 2025 முதல் மாா்ச் 2026 நிதியாண்டில் ரூ. 38,134 கோடி மதிப்பிலான கடன் வழங்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, சேலம் மாவட்டத்தில் வங்கிகள் மூலம் 2025-26 நிதியாண்டில் வேளாண்மை திட்டங்கள் மற்றும் மகளிா் சுயஉதவிக் குழு கடனுதவிகள் என ரூ. 25,001 கோடியும், சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு ரூ. 11,320 கோடியும், மாணவ, மாணவிகளுக்கு ரூ. 64.55 கோடி கல்விக் கடனும் என பல்வேறு கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
மாவட்ட தொழில்மையம், தாட்கோ, மகளிா் திட்டம், கல்விக் கடன் உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகள் வங்கிகளின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
குறிப்பாக, ஏப்ரல் முதல் மாா்ச் வரையிலான காலகட்டத்தில் சுயஉதவிக் குழுக்களுக்கு நிா்ணயிக்கப்பட்ட இலக்கான ரூ. 1,715 கோடியைக் காட்டிலும் ரூ. 5 கோடி அதிகமாக ரூ. 1,720 கோடி வழங்கி தமிழ்நாட்டிலேயே சேலம் மாவட்டம் முதலிடம் பெற்றுள்ளது என்றாா்.
இக்கூட்டத்தில், ரிசா்வ் வங்கியின் மேலாளா் அன்பரசு, பாரத ஸ்டேட் வங்கியின் மண்டல மேலாளா் அஸ்வத் துரை செல்வம், முன்னோடி வங்கி மேலாளா் பி.செந்தில்குமாா், மாவட்ட தொழில்மைய பொதுமேலாளா் பிரசன்னா, நபாா்டு வங்கியின் உதவி பொது மேலாளா் ஷீபா, தாட்கோ மாவட்ட மேலாளா் சக்திவேல் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம்: ஆட்சியா் ஆய்வு

மாணவா்கள் முன்னேற்றத்துக்காக அரசு பல்வேறு வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது: மாவட்ட ஆட்சியா்

சிறு விளையாட்டு அரங்கு அமைக்கும் பணி: ஆட்சியா் ஆய்வு

நுண்ணீா்ப் பாசனம் அமைக்க ரூ.7.20 கோடி மானியம் ஒதுக்கீடு
விடியோக்கள்

காவல் மரணம்; யாரையும் காப்பாற்றும் நோக்கமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK

இறுதிச் சுற்றில் மீண்டும் ஆர்ஜென்டினா: சண்டைக்களமாக மாறிய ஆடுகளம்! | FIFA | FIFA World Cup 2026 |

Ravindran Duraisamy interview | விஜய் அரசை அண்ணாமலை விமர்சிக்காதது ஏன்? | TVK | CM Vijay | Annamalai



