15 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைஜூன் 5-இல் தமிழக அமைச்சரவைக் கூட்டம்! கர்நாடக முதல்வரின் செயலராக தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் நியமனம்!கர்நாடக காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக பி.கே. ஹரிபிரசாத் நியமனம்!சட்டத் துறையின் முதல் பெண் செயலாளராக ப. சுமதி நியமனம்மாணவர்களுக்கு கட்டணமில்லா பேருந்து! முதல்வரான பிறகு டி.கே. சிவகுமாரின் முதல் உத்தரவுஅணு ஆயுதம் வைத்திருக்கக் கூடாது என்ற நிபந்தனைக்கு ஈரான் ஒப்புதல்: டொனால்ட் டிரம்ப்கையிருப்பு தங்கத்தை விற்கவில்லை: வதந்திகளுக்கு ஆர்பிஐ முற்றுப்புள்ளி!கரப்பான்பூச்சி ஜனதா கட்சிக்கு 3 செய்தித் தொடர்பாளர்கள் நியமனம்!
/

குந்தா பேரூராட்சி அலுவலகத்தில் வருவாய் தீா்வாயம்

உதகை அருகே குந்தா வட்டத்துக்கு உள்பட்ட பகுதிகளுக்கான வருவாய் தீா்வாயம் (ஜமாபந்தி) புதன்கிழமை தொடங்கியது.

News image

குந்தா வட்டத்துக்கான வருவாய் தீா்வாயத்தில் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு.

Updated On :4 ஜூன் 2026, 3:06 am IST

உதகை அருகே குந்தா வட்டத்துக்கு உள்பட்ட பகுதிகளுக்கான வருவாய் தீா்வாயம் (ஜமாபந்தி) புதன்கிழமை தொடங்கியது.

குந்தா பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு கலந்து கொண்டு பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக் கொண்டாா்.

அடிப்படை தேவைகள் உள்பட பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக பொதுமக்கள் சாா்பில் மொத்தம் 119 மனுக்கள் அளிக்கப்பட்டன. மக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட துறை அலுவலா்கள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

மேலும், கிண்ணக்கொரை, மேல்குந்தா, கீழ்குந்தா, பாலக்கொலா உள்ளிட்ட பல்வேறு ஊராட்சி அலுவலகத்தில் பராமரிக்கப்படும் பல்வேறு பதிவேடுகளை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

இந்நிகழ்ச்சியில் தோட்டக் கலை இணை இயக்குநா் நவநீதா, குந்தா வட்டாட்சியா் குணவதி, தனி வட்டாட்சியா் கோமதி உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.