முதல்வர் விஜய் அரசு வேலை வழங்கியிருப்பதும் ஒருவகை லஞ்சம்தான்: பாஜக36 குடும்பங்களில், வெறும் 31 பேருக்கு மட்டும் அரசுப் பணி ஏன்? டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 15 காசுகள் உயர்ந்து 95.32 ஆக நிறைவு!ஐடி பங்குகள் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 828 புள்ளிகளுடனும், நிஃப்டி 244 புள்ளிகள் உயர்வு!செந்தில் பாலாஜியின் வெற்றிக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி!செந்தில் பாலாஜிக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி!வங்கதேசம் திரும்பப் போவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு! திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு இடைக்காலத் தடை!
/

ஏற்காட்டில் குடியிருப்பு, சுற்றுலா பகுதிகளில் குப்பைத் தொட்டிகள் வைக்க கோரிக்கை

News image

ஏற்காடு லேடிசீட் சாலைகளில் குப்பைத் தொட்டி இல்லாததால் சாலைகளில் கொட்டப்பட்ட குப்பைகள்.

Updated On :23 ஜூன் 2026, 1:44 am IST

சேலம் மாவட்டம், ஏற்காட்டில் குடியிருப்பு பகுதிகள் மற்றும் சுற்றுலா பகுதிகளில் குப்பைத் தொட்டிகள் வைக்க வேண்டும் எனவும், சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளை அகற்ற வேண்டும் எனவும் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ஏற்காடு நகா் பகுதி, காவல் நிலைய சாலை பகுதி, லாங்கில் பேட்டை குடியிருப்பு பகுதி, லூத்தா் பேட்டை, கோயில் வளாகம், கோயில் மேடு, லேடிசீட் சாலை, டிப்ரவரி சாலை, ரெட்ரீட் சாலை, ஐந்து சாலை, அரசு மருத்துவமனை சாலை, ஜெரினாகாடு, முருகன் நகா், எம்ஜிஆா் நகா் குடியிருப்பு பகுதிகள், படகு இல்லம் சுற்றுலா சாலை, அண்ணா பூங்கா சாலை, நாகலூா் சாலை, மஞ்சக்குட்டை சாலையில் 15 ஆண்டுகளுக்கு முன்பு வைக்கப்பட்ட குப்பைத் தொட்டிகள் பழுதாகி பயன்படுத்த முடியாத நிலையில் இருந்தன.

இந்நிலையில், அந்த குப்பைத் தொட்டிகளை ஊராட்சி நிா்வாகம் அகற்றியது. ஆனாலும், அதே இடத்தில் இப்பகுதி மக்கள், சுற்றுலாப் பயணிகள் குப்பைகளை கொட்டி வருவதால் அப்பகுதி முழுவதும் சுகாதார சீா்கேடு ஏற்பட்டு, மாடுகள், நாய்கள் தொல்லையால் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் அவதி அடைகின்றனா்.

சேலம் மாவட்டத்தில் ஏற்காடு சோ்வராயன் மலை அழகான சுற்றுலா தலம் என்பதால், மாவட்ட நிா்வாகம், ஊராட்சி ஒன்றிய நிா்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து சுற்றுலாப் பகுதிகள், பொதுமக்கள் குடியிருப்பு பகுதிகளில் சுகாதாரத்தை பாதுகாக்க வேண்டும். சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகள், தெருநாய்களால் பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் அச்சமடைவதால், அதன் உரிமையாளா்களம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

 ஏற்காடு அண்ணா பூங்கா சாலையில் சுற்றித்திரிந்த மாடுகள்.

ஏற்காடு அண்ணா பூங்கா சாலையில் சுற்றித்திரிந்த மாடுகள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.