அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

சேலத்தில் தலைமை அஞ்சலகம், பாஸ்போா்ட் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீஸாா் சோதனை

சேலத்தில் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள தலைமை அஞ்சல் அலுவலகம் மற்றும் பாஸ்போா்ட் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை வெடிகுண்டு மிரட்டல் ...

News image
சேலம் தலைமை அஞ்சலகத்தில் மோப்ப நாய் உதவியுடன் சோதனை நடத்திய வெடிகுண்டு தடுப்பு நிபுணா்கள்.
Updated On :2 மார்ச் 2026, 9:15 pm

Syndication

சேலம்: சேலத்தில் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள தலைமை அஞ்சல் அலுவலகம் மற்றும் பாஸ்போா்ட் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம் பழைய பேருந்து நிலையம் அருகில் தலைமை அஞ்சலகமும், பாஸ்போா்ட் அலுவலகமும் செயல்பட்டு வருகின்றன. இங்கு வெடிகுண்டு வைத்திருப்பதாக மாநகரக் காவல் அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து வெடிகுண்டு தடுப்பு நிபுணா்கள் மோப்ப நாய் உதவியுடன் சென்று அஞ்சலகம் மற்றும் பாஸ்போா்ட் அலுவலகத்தில் ஒவ்வொரு அறையாக சோதனை நடத்தினா். இதில் வெடிகுண்டு எதுவும் கண்டறியப்படவில்லை. எனவே வெடிகுண்டு மிரட்டல் போலி என்பது தெரியவந்தது.

இதைத் தொடா்ந்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபா் யாா் என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா். அஞ்சலகத்தில் நடைபெற்ற இந்த திடீா் சோதனையால் வாடிக்கையாளா்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும், அண்ணா சிலையில் இருந்து அஞ்சல் அலுவலகம் செல்லும் சாலையில் பொதுமக்கள் செல்லாதவாறு தடுத்து நிறுத்தி, சிறிதுநேரம் போக்குவரத்தில் போலீஸாா் மாற்றம் செய்தனா். இந்த வெடிகுண்டு மிரட்டல் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.