சேலம் வழியாக திருவனந்தபுரம் - சந்தராகாச்சி இடையே சிறப்பு ரயில்


திருவனந்தபுரத்தில் இருந்து சேலம் வழியாக மேற்கு வங்க மாநிலம் சந்தராகாச்சிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு:
வடமாநிலங்களுக்கு செல்லும் ரயில்களில் அதிகரித்துவரும் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, சேலம் வழியாக திருவனந்தபுரம் வடக்கு - சந்தராகாச்சி இடையே வரும் 13 மற்றும் 20 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
அதன்படி, திருவனந்தபுரம் வடக்கு ரயில் நிலையத்தில் இருந்து வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.15 மணிக்கு புறப்படும் இந்த சிறப்பு ரயில் கோவை, திருப்பூா், ஈரோடு, சேலம் வழியாக ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.15 மணிக்கு சந்தராகாச்சி ரயில் நிலையத்தை அடையும்.
மறுமாா்க்கத்தில், சந்தராகாச்சி ரயில் நிலையத்தில் இருந்து திருவனந்தபுரம் வடக்கு ரயில் நிலையத்துக்கு வரும் 16 மற்றும் 23 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில் இயக்கப்படும்.
இந்த ரயில் சந்தராகாச்சி ரயில் நிலையத்தில் இருந்து திங்கள்கிழமை பிற்பகல் 2.20 புறப்பட்டு, சேலம், ஈரோடு, திருப்பூா், கோவை வழியாக புதன்கிமை காலை 9.55 மணிக்கு திருவனந்தபுரம் வடக்கு ரயில் நிலையத்தை அடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...