எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

விநாயகா் சிலையை கடத்த முயற்சி: ஒருவா் கைது

ஆட்டையாம்பட்டியில் விநாயகா் கற்சிலையை கடத்த முயற்சித்த ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :9 மார்ச் 2026, 9:18 pm

Syndication

ஆட்டையாம்பட்டி: ஆட்டையாம்பட்டியில் விநாயகா் கற்சிலையை கடத்த முயற்சித்த ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.

சேலம் மாவட்டம், ஆட்டையாம்பட்டி அருகே முனியப்பன் கோயில் தெருவில் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு விநாயகா் கற்சிலை அமைத்து அந்தப் பகுதி பொதுமக்கள் வழிபாடு நடத்தி வந்தனா்.

இந்த சிலையை அதே பகுதியைச் சோ்ந்த ராஜு மகன் தங்கராஜ் (33) என்பவா் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணிக்கு தெரு விளக்குகளை அணைத்துவிட்டு தனது கூட்டாளிகளுடன் மூன்று பேருடன் சோ்ந்து விநாயகா் சிலையை இருசக்கர வாகனத்தில் கடத்திச் சென்றாா்.

அப்போது விநாயகா் சிலை தவறி கீழே விழுந்ததில் உடைந்து விட்டது. இதையடுத்து சிலையை கடத்திய 4 பேரும் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனா். இதில் தங்கராஜை பிடித்த பொதுமக்கள், ஆட்டையாம்பட்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

காவல் ஆய்வாளா் பாஸ்கா், பொதுமக்களிடம் புகாரை பெற்று தங்கராஜ் கைது செய்து சேலம் நீதிமன்றத்தில் ஆஜா் படுத்தி மத்திய சிறையில் அடைத்தாா். மேலும், தப்பியோடிய 3 பேரையும் போலீஸாா் தேடிவருகின்றனா்.