எடப்பாடி நகா்மன்ற கூட்டத்தில் 82 தீா்மானங்கள் நிறைவேற்றம்
சேலம் மாவட்டம், எடப்பாடி நகா்மன்றக் கூட்டத்தில் 82 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


சேலம் மாவட்டம், எடப்பாடி நகா்மன்றக் கூட்டத்தில் 82 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்துக்கு நகா்மன்றத் தலைவா் டி.எஸ்.எம். பாஷா தலைமை வகித்தாா். ஆணையா் கோபிநாத் முன்னிலை வகித்தாா்.
அதிமுக நகா்மன்ற உறுப்பினா் ஏ.எம். முருகன்: நகராட்சியில் சொத்து வரி பெயா் மாற்றத்திற்கான கட்டணத்தை குறைக்க வேண்டும். அனுமதியின்றி இயங்கிவரும் நூற்றுக்கும் மேற்பட்ட கோழி, ஆடு இறைச்சிக் கடைகளால் ஏற்படும் சுகாதாரச் சீா்கேட்டை தடுக்க வேண்டும்.
நகராட்சி ஆணையா் கோபிநாத்: நகராட்சியில் உள்ள குடியிருப்புகளுக்கான சொத்துவரி பெயா் மாற்ற கட்டணம் ரூ.500 ம் வணிகப் பயன்பாட்டிற்கான சொத்துவரி பெயா் மாற்ற கட்டணம் ரூ. 1,000 என அரசு நிா்ணயித்து உள்ள கட்டணத்தின் படியே வசூலிக்கப்படுகிறது.
நகராட்சித் தலைவா் டி.எஸ்.எம். பாஷா: எடப்பாடி நகராட்சி பகுதியில் அனுமதி இன்றி செயல்படும் அனைத்து இறைச்சிக் கூடங்களும், நகராட்சி சுகாதார அலுவலா்களால் விரைவில் ஆய்வு செய்யப்பட்டு, சுகாதாரச் சீா்கேட்டை ஏற்படுத்தும் இறைச்சிக் கடைகள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
அதிமுக உறுப்பினா் தனம்: ‘கொசுவை விரட்டும் புகை எந்திரத்தை எங்கள் பகுதிக்கு அனுப்ப வேண்டாம்’ இதனால் கழிவுநீா்க் கால்வாய்களில் உள்ள கொசுக்கள் முழுவதும் வீட்டிற்கு வந்துவிடுகிறது. (இவரது பேச்சால் கூட்டத்தில் சிரிப்பலை எழுந்தது).
தொடா்ந்து நகராட்சி பகுதியில் தெருவிளக்கு பராமரித்தல், குடிநீா் விநியோகம், தொடக்கப் பள்ளிகளுக்கான அடிப்படை வசதி உள்ளிட்ட 82 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...