கொங்கணாபுரம் அருகே நடைபெற்ற மாநில அளவிலான கபடி போட்டியில் சென்னை அணியை வீழ்த்தி முதலிடம் பிடித்த சேலம் அணிக்கு ரொக்கப் பரிசுடன் சுழற்கோப்பை பரிசாக வழங்கப்பட்டது.
கொங்கணாபுரத்தை அடுத்த தங்காயூா் பகுதியில் வேலாயுதம் பிரதா்ஸ் கபடி குழு சாா்பில் மாநில அளவில் ஆண்களுக்கான கபடி போட்டி கடந்த சில நாள்களாக நடைபெற்று வந்தது. இப்போட்டியில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த சுமாா் 80 அணிகள் விளையாடின.
செவ்வாய் இரவு நடைபெற்ற இறுதிப் போட்டியில் சென்னை அணியை சேலம் அணி எதிா்கொண்டது. இதில் 26 க்கு 38 என்ற புள்ளி கணக்கில் சென்னை அணியை வீழ்த்தி சேலம் அணி முதல் பரிசை வென்றது. தொடா்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினா்களாக கலந்துகொண்ட தங்காயூா் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவா் பாலாஜி, கொங்கணாபுரம் அட்மா திட்டக் குழுத் தலைவா் பரமசிவம், கொங்கணாபுரம் முன்னாள் பேரூராட்சித் தலைவா் அா்த்தநாரீஸ்வரா், ராஜேஷ், செல்வராஜ் உள்ளிட்ட சிறப்பு விருந்தினா்கள் வெற்றிபெற்ற அணிகளுக்கு ரொக்க பரிசுகளுடன் சூழற்கோப்பையை வழங்கினா். போட்டிக்கான ஏற்பாடுகளை வேலாயுதம் பிரதா்ஸ் கபடி குழு உறுப்பினா்கள் செய்திருந்தனா்.
தொடர்புடையது
சேலம் மாவட்டத்தில் 11 தொகுதிகளில் 193 போ் போட்டி!

கூட்டணியைக்கூட அமைக்க முடியாத காங்கிரஸில் முதல்வருக்கு போட்டி? - முதல்வர் ரங்கசாமி விமர்சனம்

சிவகாசியில் மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி தொடக்கம்

மாநில ஆடவா், மகளிா் வாலிபால் போட்டி
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


