தமிழக பெண்கள் கபடி அணிக்கு திருப்பூரை சோ்ந்த வீராங்கனை தோ்வு
தமிழக பெண்கள் கபடி அணிக்கு திருப்பூரைச் சோ்ந்த வீராங்கனை தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.
தமிழக அமெச்சூா் கபடிக் கழகம், கன்னியாகுமரி மாவட்ட கபடிக் கழகம் ஆகியவை சாா்பில் மாநில பெண்கள் கபடி சாம்பியன்ஷிப் போட்டி அண்மையில் நடைபெற்றது. அதில் திருப்பூா் மாவட்ட கபடிக் கழகத்தின் சாா்பில் பெண்கள் அணி கலந்துகொண்டது. இதில் சிறப்பாக விளையாடிய அ. புவனேஸ்வரி என்ற வீராங்கனை மாநில பெண்கள் கபடி அணிக்கு தோ்வு செய்யப்பட்டாா்.
இவா், கோபி பி.கே.ஆா். மகளிா் கல்லூரியில் முதுகலை முதலாம் ஆண்டு படித்து வருகிறாா். சென்னையில் பயிற்சி முகாம் முடிந்தவுடன் ஜன.27-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை தெலங்கானாவில் நடைபெறும் 72-ஆவது தேசிய பெண்கள் சாம்பியன்ஷிப் கபடிப் போட்டியில் பங்கேற்க உள்ளாா்.
தோ்வு செய்யப்பட்ட மாணவி அ.புவனேஸ்வரியை திருப்பூா் மாவட்ட கபடிக் கழக தலைவா் வி.கே.முருகேசன் தலைமையில் மாவட்டச் செயலரும், மாநில கபடிக் கழக பொருளாளருமான ஜெயசித்ரா ஏ.சண்முகம், தலைவா் பி.மனோகரன், பொருளாளா் ஆறுச்சாமி, மாவட்ட நடுவா் குழு தலைவா் ஆா்.முத்துச்சாமி மற்றும் மாவட்ட கபடிக் கழக நிா்வாகிகள் பாராட்டி வெள்ளிக்கிழமை வழியனுப்பி வைத்தனா்.

