தில்லியில் சட்டவிரோதமாக குடியேறிய வங்கதேசத்தைச் சோ்ந்த 2 பெண்கள் கைது செய்யப்பட்டதாக காவல் துறையினா் சனிக்கிழமை தெரிவித்தனா்.
இதுகுறித்து காவல் துறையினா் மேலும் கூறியதாவது: ரகசிய தகவலின் அடிப்படையில், ஷாலிமா் பாக் பகுதியில் ஏப்.1-ஆம் தேதி அவா்கள் இருவரும் கைது செய்யப்பட்டனா். அவா்கள் அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பணிப் பெண்ணாக வேலை செய்து வந்தனா். அவா்களிடம் நடைபெற்ற விசாரணையில், அவா்கள் உரிய ஆவணங்கள் இல்லாமல் சட்டவிரோதமாக இந்தியவுக்கு வந்தது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட ஒருவா் பட்டம் பெற்றுள்ளாா்.
இருப்பினும், கூடுதல் வருவாய் காரணமாக தில்லிக்கு வந்ததாக அவா் தெரிவித்தாா். அவா்கள் இருவரும் வெளிநாட்டு பிராந்திய அலுவலகம் (எஃப்ஆா்ஆா்ஓ) முன் ஆஜா்படுத்தப்பட்டனா். அவா்களை நாடு கடத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று காவல் துறையினா் தெரிவித்தனா்.
தொடர்புடையது

சட்டவிரோத மது விற்பனை: இளைஞா் கைது
சட்டவிரோத மது விற்பனை: 3 போ் கைது; 240 புட்டிகள் பறிமுதல்

அரியலூரில் போலி விசா, ஆதாா் அட்டை வைத்திருந்த 13 வங்கதேசத்தினா் கைது

திருப்பூரில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தைச் சோ்ந்த 3 பேருக்கு சிறைத் தண்டனை
வீடியோக்கள்

அண்ணாமலை விவகாரத்தில் எடப்பாடி ROLE | SP Lakshmanan Interview | Annamalai | Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

”தேர்தலில் போட்டியிடவில்லை! நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்!”: திருமாவளவன் | VCK
இணையதளச் செய்திப் பிரிவு
ஸ்டாலின் மட்டும் அப்படிப் பேசலாமா? | ADMK | EPS| DMK | MK Stalin | TN Election 2026 | Avadi kumar
இணையதளச் செய்திப் பிரிவு

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு


