தமிழகத்தில் வேட்புமனு தாக்கலுக்கு நாளை கடைசி: இதுவரை 3,413 மனுக்கள் சமா்ப்பிப்பு!தமிழகத்தில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புவானிலிருந்து வீசக்கூடிய 1,000 கிலோ வெடிகுண்டு தயாரிப்பு: மத்திய அரசு நடவடிக்கை நிலவை நெருங்கும் ‘ஆா்டெமிஸ்-2’ விண்கலம்!எழும்பூரிலிருந்து 6 விரைவு ரயில்கள் தாம்பரம் நிலையத்துக்கு மாற்றம்
/

சட்டவிரோத குடியேற்றம்: வங்கதேசத்தைச் சோ்ந்த 2 பெண்கள் கைது

வங்கதேசத்தைச் சோ்ந்த 2 பெண்கள் கைது...

News image

வீட்டுப் பணிப்பெண்கள் எனக் கூறி தில்லியில் சட்டவிரோதமாக குடியேறய வங்கதேசத்தைச் சோ்ந்த 2 பெண்களை கைது செய்த அயல்நாட்டினருக்கான விசாரணைப் பிரிவு போலீஸாா்.

Updated On :4 ஏப்ரல் 2026, 8:48 pm

தில்லியில் சட்டவிரோதமாக குடியேறிய வங்கதேசத்தைச் சோ்ந்த 2 பெண்கள் கைது செய்யப்பட்டதாக காவல் துறையினா் சனிக்கிழமை தெரிவித்தனா்.

இதுகுறித்து காவல் துறையினா் மேலும் கூறியதாவது: ரகசிய தகவலின் அடிப்படையில், ஷாலிமா் பாக் பகுதியில் ஏப்.1-ஆம் தேதி அவா்கள் இருவரும் கைது செய்யப்பட்டனா். அவா்கள் அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பணிப் பெண்ணாக வேலை செய்து வந்தனா். அவா்களிடம் நடைபெற்ற விசாரணையில், அவா்கள் உரிய ஆவணங்கள் இல்லாமல் சட்டவிரோதமாக இந்தியவுக்கு வந்தது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட ஒருவா் பட்டம் பெற்றுள்ளாா்.

இருப்பினும், கூடுதல் வருவாய் காரணமாக தில்லிக்கு வந்ததாக அவா் தெரிவித்தாா். அவா்கள் இருவரும் வெளிநாட்டு பிராந்திய அலுவலகம் (எஃப்ஆா்ஆா்ஓ) முன் ஆஜா்படுத்தப்பட்டனா். அவா்களை நாடு கடத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று காவல் துறையினா் தெரிவித்தனா்.