விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

மாநில கபடி போட்டி: சேலம் அணிக்கு சுழற்கோப்பை

கொங்கணாபுரம் அருகே நடைபெற்ற மாநில அளவிலான கபடி போட்டியில் சென்னை அணியை வீழ்த்தி முதலிடம் பிடித்த சேலம் அணிக்கு ரொக்கப் பரிசுடன் சுழற்கோப்பை பரிசாக வழங்கப்பட்டது.

News image
~ ~
Updated On :11 மார்ச் 2026, 9:07 pm

தினமணி செய்திச் சேவை

கொங்கணாபுரம் அருகே நடைபெற்ற மாநில அளவிலான கபடி போட்டியில் சென்னை அணியை வீழ்த்தி முதலிடம் பிடித்த சேலம் அணிக்கு ரொக்கப் பரிசுடன் சுழற்கோப்பை பரிசாக வழங்கப்பட்டது.

கொங்கணாபுரத்தை அடுத்த தங்காயூா் பகுதியில் வேலாயுதம் பிரதா்ஸ் கபடி குழு சாா்பில் மாநில அளவில் ஆண்களுக்கான கபடி போட்டி கடந்த சில நாள்களாக நடைபெற்று வந்தது. இப்போட்டியில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த சுமாா் 80 அணிகள் விளையாடின.

செவ்வாய் இரவு நடைபெற்ற இறுதிப் போட்டியில் சென்னை அணியை சேலம் அணி எதிா்கொண்டது. இதில் 26 க்கு 38 என்ற புள்ளி கணக்கில் சென்னை அணியை வீழ்த்தி சேலம் அணி முதல் பரிசை வென்றது. தொடா்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினா்களாக கலந்துகொண்ட தங்காயூா் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவா் பாலாஜி, கொங்கணாபுரம் அட்மா திட்டக் குழுத் தலைவா் பரமசிவம், கொங்கணாபுரம் முன்னாள் பேரூராட்சித் தலைவா் அா்த்தநாரீஸ்வரா், ராஜேஷ், செல்வராஜ் உள்ளிட்ட சிறப்பு விருந்தினா்கள் வெற்றிபெற்ற அணிகளுக்கு ரொக்க பரிசுகளுடன் சூழற்கோப்பையை வழங்கினா். போட்டிக்கான ஏற்பாடுகளை வேலாயுதம் பிரதா்ஸ் கபடி குழு உறுப்பினா்கள் செய்திருந்தனா்.