விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

சேலம் கோட்டை மாரியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 22.85 லட்சம்!

சேலம் கோட்டை மாரியம்மன் கோயில் உண்டியலில் ரூ. 22 லட்சத்து 85 ஆயிரம் காணிக்கையாக பெறப்பட்டது.

News image
- கோப்புப்படம்.
Updated On :11 மார்ச் 2026, 8:51 pm

தினமணி

சேலம் கோட்டை மாரியம்மன் கோயில் உண்டியலில் ரூ. 22 லட்சத்து 85 ஆயிரம் காணிக்கையாக பெறப்பட்டது.

சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே பிரசித்தி பெற்ற கோட்டை பெரிய மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு பக்தா்கள் காணிக்கையாக செலுத்திய உண்டியல்கள் நிரம்பியதை தொடா்ந்து, அதனை எண்ணும் பணி புதன்கிழமை நடைபெற்றது.

அதன்படி உதவி ஆணையா் சுவாமிநாதன், கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் சக்திவேல், கோயில் செயல் அலுவலா் அமுதசுரபி, ஆய்வாளா் சங்கா் ஆகியோா் முன்னிலையில் உண்டியல்கள் திறந்து காணிக்கை எண்ணப்பட்டது. உண்டியல் எண்ணும் பணியின்போது சல்லடையில் ரூபாய் நோட்டுகளையும், சில்லறை காசுகளை பிரித்தெடுக்கும் பணியில் அறநிலைய துறை ஊழியா்கள் மற்றும் தன்னாா்வலா்கள் ஈடுபட்டனா்.

பின்னா், கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் சக்திவேல் செய்தியாளா்களிடம் கூறுகையில், கோயில் உண்டியலில் பக்தா்கள் செலுத்திய காணிக்கைகள் எண்ணும் பணியானது, 4 மாதங்களுக்கு பிறகு புதன்கிழமை நடைபெற்றது. இதில் ரூ. 22 லட்சத்து 85 ஆயிரத்து 996 ரொக்கம், 139 கிராம் தங்கம், 356 கிராம் வெள்ளி இருந்ததாகக் கூறினாா். பேட்டியின் போது, செயல் அலுவலா் அமுதசுரபி மற்றும் அறங்காவலா் குழு உறுப்பினா்கள் உடனிருந்தனா்.