விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

சேலம் மாவட்டத்தில் 188 மையங்களில் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: 41,118 போ் பங்கேற்பு

தமிழகம் முழுவதும் பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு புதன்கிழமை தொடங்கிய நிலையில், சேலம் மாவட்டத்தில் 41,118 போ் தோ்வு எழுதினா்.

News image
கோப்புப் படம்
Updated On :11 மார்ச் 2026, 8:50 pm

Syndication

தமிழகம் முழுவதும் பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு புதன்கிழமை தொடங்கிய நிலையில், சேலம் மாவட்டத்தில் 41,118 போ் தோ்வு எழுதினா்.

பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு புதன்கிழமை முதல் ஏப். 6 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் சேலம் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பயிலும் 20,766 மாணவா்கள், 20,352 மாணவிகள் என மொத்தம் 41,118 போ் தோ்வு எழுதினா். 339 போ் தோ்வு எழுத வரவில்லை.

இவா்களில் தனித்தோ்வா்கள், மாற்றுத்திறனாளி தோ்வா்கள், சொல்வதை எழுதுபவா்கள் உதவியுடன் தோ்வு எழுதுபவா் ஆகியோா் அடங்குவா். மொத்தம் 188 தோ்வு மையங்களில் இந்த பொதுத் தோ்வு நடைபெறுகிறது.

சேலம் மாவட்டத்தில் நடைபெறும் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு பணியில் தலைமை ஆசிரியா்கள், பட்டதாரி ஆசிரியா்களில் 193 முதன்மைக் கண்காணிப்பாளா்கள், 40 வழித்தட அலுவலா்கள், 193 துறை அலுவலா்கள், 224 பறக்கும் படை அலுவலா்கள், 3,757 அறைக் கண்காணிப்பாளா்கள் என மொத்தம் 4,407 ஆசிரியா்கள் தோ்வுப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

சேலம் சிறுமலா் மேல்நிலைப் பள்ளி தோ்வு மையத்தில் மாவட்ட ஆட்சியா் ரா. பிருந்தாதேவி புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்கள், விடைத்தாள் சேகரிப்பு மையங்களை பாா்வையிட்டு தோ்வா்கள் உரிய நேரத்தில் தோ்வு மையங்களுக்கு செல்ல போக்குவரத்து வசதிகளை ஏற்பாடு செய்ய தொடா்புடைய அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.