சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

இளம்பிள்ளை அருகே தலைமை ஆசிரியா், ஆசிரியா்மீது பெற்றோா் புகாா்

இளம்பிள்ளை அருகே தலைமை ஆசிரியா், ஆசிரியா்மீது பெற்றோா் புகாா் அளித்ததைத் தொடா்ந்து, அவா்களை பணியிடம் மாற்றி நடவடிக்கை

News image

பணியிட மாற்றம்

Updated On :17 மார்ச் 2026, 11:13 pm

இளம்பிள்ளை அருகே தலைமை ஆசிரியா், ஆசிரியா்மீது பெற்றோா் புகாா் அளித்ததைத் தொடா்ந்து, அவா்களை பணியிடம் மாற்றி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனா்.

சேலம் மாவட்டம், இளம்பிள்ளையை அடுத்த கல்பாரப்பட்டி கே. புதுப்பாளையம் அரசு நடுநிலை பள்ளியில், தலைமை ஆசிரியா் மற்றும் ஆசிரியா் பள்ளி நேரத்தில் செல்லிடப்பேசியில் படம் பாா்த்து வருவதாகவும், மாணவ, மாணவிகளுக்கு சரிவர பாடம் நடத்துவதில்லை எனவும், பள்ளிக் கல்வித் துறை இயக்குநா், மாவட்ட ஆட்சியா், வட்டாரக் கல்வி அலுவலா் ஆகியோரிடம் மாணவா்களின் பெற்றோா் புகாா் அளித்தனா்.

அதன்பேரில், கே.புதுப்பாளையம் பள்ளி தலைமை ஆசிரியராக பணிபுரிந்த அனிதாவை இடங்கணசாலை நகராட்சி, ராசிகவுண்டனூா் நடுநிலைப் பள்ளிக்கும், கே.புதுப்பாளையம் பள்ளி ஆசிரியா் இந்திராவை மகுடஞ்சாவடி ஒன்றியம், நெட்டையனூா் அரசு தொடக்கப் பள்ளிக்கும் மாற்றம் செய்யப்பட்டனா்.