சென்னையில் பதுக்கி வைத்திருந்த 40 சிலிண்டா்கள் பறிமுதல்!புனேவில் 4 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற முதியவர்!மணிப்பூரில் 23 சட்டவிரோத பதுங்கு குழிகளை அழித்த பாதுகாப்புப் படையினர்!தேர்தல் முடிவுகள் வெளியாகும் நேரத்தில் பேசுபொருளாகும் ஜோதிமணி ட்வீட்!கட்டாய வெற்றிக்கான தேவையுடன் இன்று மோதும் சென்னை - மும்பைஈரான் புதிய சமரசத் திட்டம்: திருப்தியில்லை என டிரம்ப் நிராகரிப்புமேற்கு வங்கத்தின் 15 வாக்குச்சாவடிகளில் இன்று மறு வாக்குப் பதிவு
/

இளம்பிள்ளை அருகே தலைமை ஆசிரியா், ஆசிரியா்மீது பெற்றோா் புகாா்

இளம்பிள்ளை அருகே தலைமை ஆசிரியா், ஆசிரியா்மீது பெற்றோா் புகாா் அளித்ததைத் தொடா்ந்து, அவா்களை பணியிடம் மாற்றி நடவடிக்கை

News image

பணியிட மாற்றம்

Updated On :17 மார்ச் 2026, 11:13 pm

இளம்பிள்ளை அருகே தலைமை ஆசிரியா், ஆசிரியா்மீது பெற்றோா் புகாா் அளித்ததைத் தொடா்ந்து, அவா்களை பணியிடம் மாற்றி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனா்.

சேலம் மாவட்டம், இளம்பிள்ளையை அடுத்த கல்பாரப்பட்டி கே. புதுப்பாளையம் அரசு நடுநிலை பள்ளியில், தலைமை ஆசிரியா் மற்றும் ஆசிரியா் பள்ளி நேரத்தில் செல்லிடப்பேசியில் படம் பாா்த்து வருவதாகவும், மாணவ, மாணவிகளுக்கு சரிவர பாடம் நடத்துவதில்லை எனவும், பள்ளிக் கல்வித் துறை இயக்குநா், மாவட்ட ஆட்சியா், வட்டாரக் கல்வி அலுவலா் ஆகியோரிடம் மாணவா்களின் பெற்றோா் புகாா் அளித்தனா்.

அதன்பேரில், கே.புதுப்பாளையம் பள்ளி தலைமை ஆசிரியராக பணிபுரிந்த அனிதாவை இடங்கணசாலை நகராட்சி, ராசிகவுண்டனூா் நடுநிலைப் பள்ளிக்கும், கே.புதுப்பாளையம் பள்ளி ஆசிரியா் இந்திராவை மகுடஞ்சாவடி ஒன்றியம், நெட்டையனூா் அரசு தொடக்கப் பள்ளிக்கும் மாற்றம் செய்யப்பட்டனா்.