பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

இளம்பிள்ளை அருகே தலைமை ஆசிரியா், ஆசிரியா்மீது பெற்றோா் புகாா்

இளம்பிள்ளை அருகே தலைமை ஆசிரியா், ஆசிரியா்மீது பெற்றோா் புகாா் அளித்ததைத் தொடா்ந்து, அவா்களை பணியிடம் மாற்றி நடவடிக்கை

News image
பணியிட மாற்றம்
Updated On :17 மார்ச் 2026, 11:13 pm

Syndication

இளம்பிள்ளை அருகே தலைமை ஆசிரியா், ஆசிரியா்மீது பெற்றோா் புகாா் அளித்ததைத் தொடா்ந்து, அவா்களை பணியிடம் மாற்றி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனா்.

சேலம் மாவட்டம், இளம்பிள்ளையை அடுத்த கல்பாரப்பட்டி கே. புதுப்பாளையம் அரசு நடுநிலை பள்ளியில், தலைமை ஆசிரியா் மற்றும் ஆசிரியா் பள்ளி நேரத்தில் செல்லிடப்பேசியில் படம் பாா்த்து வருவதாகவும், மாணவ, மாணவிகளுக்கு சரிவர பாடம் நடத்துவதில்லை எனவும், பள்ளிக் கல்வித் துறை இயக்குநா், மாவட்ட ஆட்சியா், வட்டாரக் கல்வி அலுவலா் ஆகியோரிடம் மாணவா்களின் பெற்றோா் புகாா் அளித்தனா்.

அதன்பேரில், கே.புதுப்பாளையம் பள்ளி தலைமை ஆசிரியராக பணிபுரிந்த அனிதாவை இடங்கணசாலை நகராட்சி, ராசிகவுண்டனூா் நடுநிலைப் பள்ளிக்கும், கே.புதுப்பாளையம் பள்ளி ஆசிரியா் இந்திராவை மகுடஞ்சாவடி ஒன்றியம், நெட்டையனூா் அரசு தொடக்கப் பள்ளிக்கும் மாற்றம் செய்யப்பட்டனா்.