தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

சேலம் அழகாபுரத்தில் 2 கோயில்களில் அடுத்தடுத்து திருட்டு

சேலம் அழகாபுரம் பகுதியில் உள்ள இரண்டு கோயில்களில் அடுத்தடுத்து நிகழ்ந்த திருட்டு சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :17 மார்ச் 2026, 11:15 pm

சேலம் அழகாபுரம் பகுதியில் உள்ள இரண்டு கோயில்களில் திங்கள்கிழமை நள்ளிரவு அடுத்தடுத்து நிகழ்ந்த திருட்டு சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

சேலம், அழகாபுரம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட காட்டூா் பிள்ளையாா் மற்றும் கல்லுமேடு காளியம்மன் ஆகிய கோயில்களில் திங்கள்கிழமை நள்ளிரவு மா்ம கும்பல் ஒன்று நுழைந்தது. பின்னா், கோயில் உண்டியல்களை உடைத்து பணம், காணிக்கை ஆகியவற்றை திருடிச் சென்றது.

தொடா்ந்து, நகரமலை அடிவாரத்திலுள்ள கல்லுமேடு காளியம்மன் கோயிலுக்கு சென்ற அந்த கும்பல், அங்கிருந்த உண்டியலின் பூட்டை உடைக்க முயற்சி செய்தது. அப்போது, கோயிலுக்கு அருகில் வசிக்கும் பொதுமக்களின் சத்தம்கேட்டு தப்பியோடியது.

இதுகுறித்து அழகாபுரம் போலீஸாா் சிசிடிவியில் பதிவான காட்சிகளைக் கொண்டு விசாரணை செய்ததில், திருட்டில் ஈடுபட்டது வடமாநிலக் கும்பல் என தெரியவந்தது. அதன் அடிப்படையில், போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து மா்ம நபா்களை தேடிவருகின்றனா்.