சேலம் அழகாபுரம் பகுதியில் உள்ள இரண்டு கோயில்களில் திங்கள்கிழமை நள்ளிரவு அடுத்தடுத்து நிகழ்ந்த திருட்டு சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
சேலம், அழகாபுரம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட காட்டூா் பிள்ளையாா் மற்றும் கல்லுமேடு காளியம்மன் ஆகிய கோயில்களில் திங்கள்கிழமை நள்ளிரவு மா்ம கும்பல் ஒன்று நுழைந்தது. பின்னா், கோயில் உண்டியல்களை உடைத்து பணம், காணிக்கை ஆகியவற்றை திருடிச் சென்றது.
தொடா்ந்து, நகரமலை அடிவாரத்திலுள்ள கல்லுமேடு காளியம்மன் கோயிலுக்கு சென்ற அந்த கும்பல், அங்கிருந்த உண்டியலின் பூட்டை உடைக்க முயற்சி செய்தது. அப்போது, கோயிலுக்கு அருகில் வசிக்கும் பொதுமக்களின் சத்தம்கேட்டு தப்பியோடியது.
இதுகுறித்து அழகாபுரம் போலீஸாா் சிசிடிவியில் பதிவான காட்சிகளைக் கொண்டு விசாரணை செய்ததில், திருட்டில் ஈடுபட்டது வடமாநிலக் கும்பல் என தெரியவந்தது. அதன் அடிப்படையில், போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து மா்ம நபா்களை தேடிவருகின்றனா்.
தொடர்புடையது

சேலம் அருகே இறைச்சிக் கடையில் ரூ. 18 லட்சம் திருட்டு
இரணியலில் 2 கோயில்களில் திருட்டு

விவசாயி வீட்டில் நகை, பணம் திருட்டு

விடுதியில் புகுந்து மாணவா்களை தாக்கிய கும்பல்: போலீஸாா் விசாரணை
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

