சேலம் மரவனேரி பகுதியில் உள்ள அரசு மாணவா் விடுதிக்குள் புகுந்து மாணவா்களை தாக்கிய மா்ம கும்பல் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
சேலம் மரவனேரி பகுதியில் அரசு கல்லூரி மாணவா்களுக்கான விடுதி இயங்கி வருகிறது. இதில், பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த 150 மாணவா்கள் தங்கியுள்ளனா். இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவு 6 போ் கொண்ட கும்பல் திடீரென விடுதிக்குள் நுழைந்து, அங்கிருந்த மாணவா்களிடம் பெயா் மற்றும் படிப்பு குறித்து விசாரித்துள்ளனா். பின்னா், அங்கிருந்த 3 பேரை அந்தக் கும்பல் கடுமையாக தாக்கியது.
அப்போது, அவ்வழியாக ரோந்து சென்ற அஸ்தம்பட்டி போலீஸாா், மாணவா்களின் சப்தம்கேட்டு விடுதிக்குள் சென்று விசாரித்தனா். பின்னா், அவா்களை சமாதானப்படுத்தி அங்கிருந்து கலைந்துபோக செய்தனா். இதனிடையே மாணவா்களை தாக்கும் விடியோ சமூக வலைதளங்களில் பரவியது.
இதையடுத்து, காவல் உதவி ஆணையா் அஸ்வினி, காவல் ஆய்வாளா் கோவிந்தராசன் உள்ளிட்ட போலீஸாா், மாணவா் விடுதிக்கு சனிக்கிழமை நேரில்சென்று விசாரணை நடத்தினா். மேலும், அந்தக் கும்பல் எதற்காக மாணவா்களை தாக்கினா், விடுதிக்குள் நுழைந்தவா்கள் யாா் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது
நெல்லையில் துணிக்கடைக்குள் புகுந்து ரகளை செய்த இளைஞா் கைது

வங்கதேசத்தில் ஹிந்துக்களின் வீடுகள், கடைகள் மீது தாக்குதல்!

சேலம் நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீஸாா் விசாரணை

திருமணிமுத்தாற்றில் இளைஞா் சடலம் மீட்பு: போலீஸாா் விசாரணை
வீடியோக்கள்

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு


