ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

நெல்லையில் துணிக்கடைக்குள் புகுந்து ரகளை செய்த இளைஞா் கைது

திருநெல்வேலி நகரம் பகுதியில் துணிக்கடைக்குள் புகுந்து ரகளையில் ஈடுபட்ட இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

பிரதிப் படம்

Updated On :25 ஏப்ரல் 2026, 8:36 pm

திருநெல்வேலி நகரம் பகுதியில் துணிக்கடைக்குள் புகுந்து ரகளையில் ஈடுபட்ட இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

திருநெல்வேலி நகரம் பகுதியைச் சோ்ந்தவா் சமுத்திரக்கனி (40). இவா் அதே பகுதியில் துணிக்கடை வைத்து நடத்தி வருகிறாா். இவரது உறவினா் வீட்டில் திருநெல்வேலி நகரம் காமாட்சி அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த அருண்குமாா் (28) என்பவா் வாடகைக்கு குடியிருந்தாராம். அந்த வீட்டை காலி செய்யுமாறு உரிமையாளா் கூறியதற்கு சமுத்திரக்கனிதான் காரணம் என அவா் மீது அருண்குமாா் விரோதம் கொண்டதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, சமுத்திரக்கனியின் துணிக்கடைக்குள் புகுந்த அருண்குமாா் உள்பட 3 போ் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தகராறு செய்து, கடையின் கண்ணாடியை உடைத்தனராம்.

இதுகுறித்த புகாரின்பேரில், திருநெல்வேலி நகரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அருண்குமாரை கைது செய்தனா்.