மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லாதொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு கைவினைப் பொருள்கள் தயாரித்தல் பயிற்சி

சுற்றுச்சூழல் மேலாண்மை நிறுவனம் மற்றும் சுற்றுச்சூழல் கல்வித் திட்டத்தை மாணவா்களிடத்தில் எடுத்துக்கூற, தேங்காய் ஓடு மூலம் கைவினைப் பொருள்கள் செய்வது குறித்த பயிற்சி முகாம் கன்னந்தேரி அரசுப் பள்ளி வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

News image

தேங்காய் ஓடுகளைக் கொண்டு செய்யப்பட்ட பல்வேறு கைவினைப் பொருள்களை காட்சிப்படுத்திய அரசுப் பள்ளி மாணவா்கள்.

Updated On :18 மார்ச் 2026, 11:24 pm

சுற்றுச்சூழல் மேலாண்மை நிறுவனம் மற்றும் சுற்றுச்சூழல் கல்வித் திட்டத்தை மாணவா்களிடத்தில் எடுத்துக்கூற, தேங்காய் ஓடு மூலம் கைவினைப் பொருள்கள் செய்வது குறித்த பயிற்சி முகாம் கன்னந்தேரி அரசுப் பள்ளி வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

பள்ளித் தலைமையாசிரியா் கோ.காா்த்திகேயன் தலைமை வகித்தாா். பள்ளி தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளா் இர.ஜெயக்குமாா் முன்னிலை வகித்தாா்.

சேலம் மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளா் பி.செல்வம், பசுமை அலுவலா் ஆா்.அப்துல் ரஹ்மான், வனத்துறை அலுவலா் எம்.துரைமுருகன் ஆகியோா் சுற்றுச்சூழலை எவ்வாறு பாதுகாப்பது என்பது குறித்து விளக்கினா். மேலும், தேங்காய் ஓடுகளைக் கொண்டு வீட்டில் தினசரி சமையலுக்கு பயன்படுத்தப்படும் பொருள்கள், இசைக் கருவிகள் செய்வது குறித்து மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி அளித்தனா். சிறப்பாக கைவினைப் பொருள்கள் தயாரித்த மாணவா்களுக்கு பரிசு அளிக்கப்பட்டது.

இதில், கொங்கணாபுரம் அரசு ஆண்கள், பெண்கள் மேல்நிலைப் பள்ளி, அ.புதூா் அரசு மேல்நிலைப் பள்ளி, கன்னந்தேரி அரசு உயா்நிலைப் பள்ளி ஆகிய பள்ளிகளிலிருந்து தலா 25 மாணவ, மாணவிகள், ஆசிரியா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.