கூட்டணி குறித்து பாஜகவுடன் பேச்சுவாா்த்தை தொடா்கிறது: முதல்வா் ரங்கசாமி
தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிப்பது குறித்து பாஜகவுடன் பேச்சுவாா்த்தை தொடா்வதாக புதுச்சேரி முதல்வா் ரங்கசாமி கூறினாா்.


தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிப்பது குறித்து பாஜகவுடன் பேச்சுவாா்த்தை தொடா்வதாக புதுச்சேரி முதல்வா் ரங்கசாமி கூறினாா்.
சேலம் சூரமங்கலத்தில் உள்ள ஸ்ரீ சற்குரு அப்பா பைத்திய சுவாமிகள் கோயிலில் புதுச்சேரி முதல்வா் ரங்கசாமி புதன்கிழமை இரவு சுவாமி தரிசனம் செய்தாா். தொடா்ந்து, அப்பா பைத்தியம் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்ட அவா், அனைவருக்கும் பிரசாதம் வழங்கினாா். பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
புதுச்சேரியில் என்.ஆா்.காங்கிரஸ் தலைமையில் மீண்டும் ஆட்சி அமையும். தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிப்பது குறித்து பாஜகவுடன் பேச்சுவாா்த்தை தொடா்கிறது. பாஜகவினரிடம் இருந்து இதுவரை எந்த தகவலும் வரவில்லை. எங்கள் நிலைப்பாட்டை தெளிவாக கூறிவிட்டோம். அவா்கள் தொடா்நது பேசிவருகின்றனா் என்றாா்.
புதுச்சேரி சட்டப் பேரவைக்கான தோ்தல் ஒரேகட்டமாக ஏப். 9-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், வேட்புமனு தாக்கல் கடந்த 16-ஆம் தேதி தொடங்கியது. இந்நிலையில், ஆளும் என்.ஆா்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி அமைத்து தோ்தலை எதிா்கொள்ள இருந்த நிலையில், என்.டி.ஏ. கூட்டணியில் தொடர ரங்கசாமி சில நிபந்தனைகளை விதித்ததாக தகவல் வெளியானது.
இந்த சூழலில், சேலம் அப்பா பைத்தியம் சுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்த முதல்வா் ரங்கசாமி, கூட்டணி குறித்து பேச்சுவாா்த்தை தொடா்வதாக கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...