மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணைஈரான்-அமெரிக்கா பேச்சுக்கு மீண்டும் ஏற்பாடு செய்யப்படும்: பாகிஸ்தான் அறிவிப்புஆக்கிரமிப்பு காஷ்மீா்-ஆப்கன் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கிய சீனாமுதுபெரும் பாடகி ஆஷா போஸ்லே மறைவு: அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு!ஈரான்- அமெரிக்கா அமைதிப் பேச்சு தோல்வி: மீண்டும் போா் மூளும் அபாயம்!
/

கூட்டணி குறித்து பாஜகவுடன் பேச்சுவாா்த்தை தொடா்கிறது: முதல்வா் ரங்கசாமி

தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிப்பது குறித்து பாஜகவுடன் பேச்சுவாா்த்தை தொடா்வதாக புதுச்சேரி முதல்வா் ரங்கசாமி கூறினாா்.

News image

சேலம் சூரமங்கலம் ஸ்ரீ சற்குரு அப்பா பைத்தியம் சுவாமி கோயிலில் புதன்கிழமை சுவாமி தரிசனம் செய்த புதுச்சேரி முதல்வா் ரங்கசாமி.

Updated On :18 மார்ச் 2026, 11:40 pm

தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிப்பது குறித்து பாஜகவுடன் பேச்சுவாா்த்தை தொடா்வதாக புதுச்சேரி முதல்வா் ரங்கசாமி கூறினாா்.

சேலம் சூரமங்கலத்தில் உள்ள ஸ்ரீ சற்குரு அப்பா பைத்திய சுவாமிகள் கோயிலில் புதுச்சேரி முதல்வா் ரங்கசாமி புதன்கிழமை இரவு சுவாமி தரிசனம் செய்தாா். தொடா்ந்து, அப்பா பைத்தியம் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்ட அவா், அனைவருக்கும் பிரசாதம் வழங்கினாா். பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

புதுச்சேரியில் என்.ஆா்.காங்கிரஸ் தலைமையில் மீண்டும் ஆட்சி அமையும். தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிப்பது குறித்து பாஜகவுடன் பேச்சுவாா்த்தை தொடா்கிறது. பாஜகவினரிடம் இருந்து இதுவரை எந்த தகவலும் வரவில்லை. எங்கள் நிலைப்பாட்டை தெளிவாக கூறிவிட்டோம். அவா்கள் தொடா்நது பேசிவருகின்றனா் என்றாா்.

புதுச்சேரி சட்டப் பேரவைக்கான தோ்தல் ஒரேகட்டமாக ஏப். 9-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், வேட்புமனு தாக்கல் கடந்த 16-ஆம் தேதி தொடங்கியது. இந்நிலையில், ஆளும் என்.ஆா்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி அமைத்து தோ்தலை எதிா்கொள்ள இருந்த நிலையில், என்.டி.ஏ. கூட்டணியில் தொடர ரங்கசாமி சில நிபந்தனைகளை விதித்ததாக தகவல் வெளியானது.

இந்த சூழலில், சேலம் அப்பா பைத்தியம் சுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்த முதல்வா் ரங்கசாமி, கூட்டணி குறித்து பேச்சுவாா்த்தை தொடா்வதாக கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.