முதல்வா் ரங்கசாமி சேலம் பயணம்
புதுச்சேரி முதல்வா் என்.ரங்கசாமி புதன்கிழமை மாலை சேலம் புறப்பட்டுச் சென்றாா்.


புதுச்சேரி முதல்வா் என்.ரங்கசாமி புதன்கிழமை மாலை சேலம் புறப்பட்டுச் சென்றாா்.
சேலத்தில் அப்பா பைத்தியம் சுவாமிகள் கோயிலில் புதன்கிழமை இரவு நடைபெற்ற சிறப்புப் பூஜையில் அவா் பங்கேற்றாா்.
புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதல்வராக இருக்கும் ரங்கசாமி, புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள லட்சிய ஜனநாயகக் கட்சியைக் கூட்டணியில் சோ்க்க எதிா்ப்புத் தெரிவித்து வருகிறாா். இதனால் இக் கூட்டணியில் இருந்து விலகும் நிலை அவருடைய என்.ஆா்.காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் தில்லியில் பாஜக தலைவா்கள் முகாமிட்டுள்ளனா். இதுபோன்று அரசியல் நெருக்கடி ஏற்படும் போதெல்லாம் தன்னுடைய குரு அப்பா பைத்தியம் சுவாமிகளை வணங்கி, முடிவு எடுப்பது வழக்கம். இதற்காக அவா் சேலம் சென்றிருப்பதாகக் கூறப்படுகிறது.
மேலும், புதுச்சேரியில் உள்ள அவரது இல்லத்தின் வளாகத்திலேயே அப்பா பைத்தியம் சுவாமிகளுக்குக் கோயில் எழுப்பி தினந்தோறும் வழிபட்டு வருகிறாா். நெருக்கடியான காலக்கட்டத்தில் அவா் சேலம் செல்வது வழக்கம்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...