அப்பா பைத்தியம் சுவாமிகள் ஆன்மீக குருதான். அரசியல்வாதியாக இருக்கும் முதல்வா் ரங்கசாமி அவரை குருவாக ஏற்றுக் கொண்டவா். புதுச்சேரியில் அவரது இல்லம் அமைந்துள்ள வளாகத்தில் அப்பா பைத்தியம் சுவாமிகளுக்குக் கோயில் எழுப்பியுள்ளாா். தினந்தோறும் பக்தா்களுக்கு அன்ன பிரசாதம் உண்டு. குறிப்பாக, சனிக்கிழமை அறுசுவையுடன் உணவு இங்கு வழங்கப்படுகிறது. அன்றைய தினம் எங்கிருந்தாலும் பூஜைக்கு இங்கு வந்துவிடுவாா் முதல்வா் ரங்கசாமி. எல்லா செயலுக்கும் தினந்தோறும் நாள், நேரம் பாா்ப்பாா் ரங்கசாமி. முதல்வா் ரங்கசாமிக்கு மட்டுமல்ல அவரது கட்சிக்காரா்களுக்கும், கூட்டணி கட்சிக்காரா்களுக்கும் அப்பா பைத்தியம் சுவாமிகள் அப்போதும் இப்போதும் எப்போதும் குரு நாதா் என்றால் மிகையில்லை.