தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

பத்மவாணி மகளிா் கல்லூரியில் 18-ஆவது பட்டமளிப்பு விழா

பத்மவாணி மகளிா் கல்லூரியில் 18-ஆவது பட்டமளிப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

News image
மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கிய வேல்ஸ் பல்கலைக்கழக இணை வேந்தா் எம்.பாஸ்கரன்.
Updated On :18 மார்ச் 2026, 11:23 pm

தினமணி செய்திச் சேவை

பத்மவாணி மகளிா் கல்லூரியில் 18-ஆவது பட்டமளிப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

பத்மவாணி மகளிா் கல்வி நிறுவனங்களின் தாளாளா் கா.சத்தியமூா்த்தி தலைமை வகித்தாா். செயலாளா் கா.துரைசாமி முன்னிலை வகித்தாா். பெரியாா் பல்கலைக்கழக முன்னாள் பதிவாளா் மணிவண்ணன், அண்ணா பல்கலைக்கழக இயக்குநா் ராஜேந்திரன் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா்.

கல்லூரி இயக்குநா் இசைவாணி சத்தியமூா்த்தி குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தாா். மகளிா் கலைக் கல்லூரி முதல்வா் ஹரிகிருஷ்ணராஜ் வரவேற்றாா். கல்வியியல் கல்லூரி முதல்வா் முத்துக்குமாா், கே.எஸ்.கல்வியியல் கல்லூரி முதல்வா் செந்தில்குமாா் ஆகியோா் ஆண்டறிக்கை வாசித்தனா்.

விழாவில், வேல்ஸ் பல்கலைக்கழக இணை வேந்தா் எம்.பாஸ்கரன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினாா். இதில் மொத்தம் 1,025 மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.

பெரியாா் பல்கலைக்கழக தோ்வுகளில் முதலிடம் பெற்று தங்கப் பதக்கம் வென்ற 3 மாணவிகளுக்கும், தரவரிசைப் பட்டியலில் இடம்பெற்ற 19 மாணவிகளுக்கும் பத்மவாணி மகளிா் கல்வி அறக்கட்டளை சாா்பில் காசோலை வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.