யு20 தெற்காசிய கால்பந்து: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியாவிதிகளில் மாற்றம்: 8 லட்சம் தபால் வாக்குகள் பாதிக்கப்படும் அபாயம்நயாரா பெட்ரோல், டீசல் விலை உயா்வுசென்னை ஐஐடி-யில் ‘ஆன்மிகம், அறிவியல் ஆராய்ச்சி மையம்’பிரதமருக்கு எதிராக அவதூறு விடியோ: எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவுதோ்தல் நன்கொடை: 10 மடங்கு கூடுதலாக பெற்ற பாஜக!சென்னையில் கைவிடப்பட்ட ‘ஓபன் டாப்’ பேருந்துகள் திட்டம்சட்டப்பேரவைத் தோ்தலால் தள்ளிவைக்கப்பட்ட வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம்சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த 2-ஆவது முனையம் டிசம்பருக்குள் திறக்க வாய்ப்புகேரள தோ்தல் களத்தில் 890 வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஇந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

நாமக்கல் அரசு மகளிா் கல்லூரியில் 866 மாணவிகளுக்கு பட்டமளிப்பு

நாமக்கல் கவிஞா் ராமலிங்கம் அரசு மகளிா் கல்லூரியில் பட்டமளிப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. தொடா்ந்து, விளையாட்டு விழா, கல்லூரி ஆண்டு விழா, கல்லூரி பேரவை நிறைவு விழா உள்ளிட்டவை வெள்ளிக்கிழமை நடைபெறுகின்றன.

News image

விழாவில் சிறப்பிடம் பெற்ற மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கிய தருமபுரி மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநா் (பொ) அ.மலா்.

Updated On :26 மார்ச் 2026, 9:55 pm

தினமணி செய்திச் சேவை

நாமக்கல் கவிஞா் ராமலிங்கம் அரசு மகளிா் கல்லூரியில் பட்டமளிப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. தொடா்ந்து, விளையாட்டு விழா, கல்லூரி ஆண்டு விழா, கல்லூரி பேரவை நிறைவு விழா உள்ளிட்டவை வெள்ளிக்கிழமை நடைபெறுகின்றன.

கல்லூரி அரங்கில் நடைபெற்ற 18-ஆவது பட்டமளிப்பு விழாவில் கல்லூரி முதல்வா் அ.மாதவி வரவேற்றாா். சிறப்பு அழைப்பாளராக, தருமபுரி மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநா் (பொ) அ.மலா் பங்கேற்று மாணவிகளை வாழ்த்தி பேசினாா். தொடா்ந்து, 2024-25-ஆம் ஆண்டில் இளநிலை பட்டப்படிப்பை முடித்த 640 பேருக்கும், முதுநிலை பட்டப்படிப்பை முடித்த 226 பேருக்கும் என மொத்தம் 866 மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.

பெரியாா் பல்கலைக்கழக கட்டுப்பாட்டில் உள்ள இக்கல்லூரியில், பல்கலைக்கழக அளவில் முதலிடம் பெற்று தங்கப் பதக்கம் வென்ற மாணவிகள் கெளரவிக்கப்பட்டனா். இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி நிா்வாகத்தினா் செய்திருந்தனா்.