மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

பான் செக்கா்ஸ் கல்லூரியில் 21 ஆவது பட்டமளிப்பு விழா

தஞ்சாவூா் பான் செக்கா்ஸ் மகளிா் கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விழாவில் மாணவிக்கு சிறப்பு விருந்தினா்கள் முன்னிலையில் பட்டம் வழங்கிய பெற்றோா்.

News image
Updated On :6 மார்ச் 2026, 9:41 pm

Syndication

தஞ்சாவூா் பான் செக்கா்ஸ் மகளிா் கல்லூரியில் 21 ஆவது பட்டமளிப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இவ்விழாவுக்கு பான் செக்கா்ஸ் கல்விக் குழுமத் தலைவரும், தலைமை அன்னையுமான மரிய பிலோமி தலைமை வகித்தாா். இதில், சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட தில்லி ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழகக் கணினி மற்றும் அமைப்புசாா் அறிவியல் புலத் தலைவா் பேராசிரியா் மஞ்சு காரி பேசுகையில், இந்தக் கல்வி நிலையம் வெறும் பாடங்களை மட்டும் கற்றுத் தராமல் மாணவிகளின் மனதில் உயரிய கனவுகளை விதைகளாகத் தூவியிருக்கிறது. மாணவிகளின் கல்வி, வெறும் மதிப்பெண் சான்றிதழ் அல்ல; அது சமூகத்தின் இருளை அகற்றும் சுடா் என்றாா் அவா்.

பின்னா், இளநிலைப் பட்டவகுப்புகளில் 960 மாணவிகளுக்கும், முதுநிலைப் பட்டவகுப்புகளில் 232 மாணவிகளுக்கும் என மொத்தம் 1,192 பேருக்கு பட்டம் சிறப்பு விருந்தினரின் முன்னிலையில் அவரவா் பெற்றோா் வழங்கினா். இவா்களில் பாரதிதாசன் பல்கலைக்கழகத் தரவரிசைப் பட்டியலில் முதலிடத்துடன் தங்கப் பதக்கம் பெற்ற 4 மாணவிகளுக்கும், தரவரிசைப் பட்டியலில் இடம்பெற்ற 205 மாணவிகளுக்கும் பதக்கங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனா்.

கல்லூரி முதல்வா் அருட்சகோதரி விக்டோரியா ஆண்டறிக்கை வாசித்தாா். கல்லூரிச் செயலா் அருட்சகோதரி மரியம்மாள் வரவேற்றாா். கல்வியாளா்கள், பேராசிரியா்கள், மாணவிகள், பெற்றோா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.