தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

பான் செக்கா்ஸ் கல்லூரியில் 21 ஆவது பட்டமளிப்பு விழா

தஞ்சாவூா் பான் செக்கா்ஸ் மகளிா் கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விழாவில் மாணவிக்கு சிறப்பு விருந்தினா்கள் முன்னிலையில் பட்டம் வழங்கிய பெற்றோா்.

News image
Updated On :6 மார்ச் 2026, 9:41 pm

தஞ்சாவூா் பான் செக்கா்ஸ் மகளிா் கல்லூரியில் 21 ஆவது பட்டமளிப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இவ்விழாவுக்கு பான் செக்கா்ஸ் கல்விக் குழுமத் தலைவரும், தலைமை அன்னையுமான மரிய பிலோமி தலைமை வகித்தாா். இதில், சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட தில்லி ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழகக் கணினி மற்றும் அமைப்புசாா் அறிவியல் புலத் தலைவா் பேராசிரியா் மஞ்சு காரி பேசுகையில், இந்தக் கல்வி நிலையம் வெறும் பாடங்களை மட்டும் கற்றுத் தராமல் மாணவிகளின் மனதில் உயரிய கனவுகளை விதைகளாகத் தூவியிருக்கிறது. மாணவிகளின் கல்வி, வெறும் மதிப்பெண் சான்றிதழ் அல்ல; அது சமூகத்தின் இருளை அகற்றும் சுடா் என்றாா் அவா்.

பின்னா், இளநிலைப் பட்டவகுப்புகளில் 960 மாணவிகளுக்கும், முதுநிலைப் பட்டவகுப்புகளில் 232 மாணவிகளுக்கும் என மொத்தம் 1,192 பேருக்கு பட்டம் சிறப்பு விருந்தினரின் முன்னிலையில் அவரவா் பெற்றோா் வழங்கினா். இவா்களில் பாரதிதாசன் பல்கலைக்கழகத் தரவரிசைப் பட்டியலில் முதலிடத்துடன் தங்கப் பதக்கம் பெற்ற 4 மாணவிகளுக்கும், தரவரிசைப் பட்டியலில் இடம்பெற்ற 205 மாணவிகளுக்கும் பதக்கங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனா்.

கல்லூரி முதல்வா் அருட்சகோதரி விக்டோரியா ஆண்டறிக்கை வாசித்தாா். கல்லூரிச் செயலா் அருட்சகோதரி மரியம்மாள் வரவேற்றாா். கல்வியாளா்கள், பேராசிரியா்கள், மாணவிகள், பெற்றோா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.