/
தூத்துக்குடி காமராஜ் மகளிா் கல்லூரியில் 2ஆவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
திருநெல்வேலி, மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக் கழகத்தின் தொலைதூரக் கல்வி மற்றும் இணையவழிக் கல்வியின் இயக்குநரும், பேராசிரியருமான ஜி. அண்ணாதுரை சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு 73 மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கிப் பேசினாா்.
பல்கலை தரவரிசையில் இளநிலை வணிகவியல் வங்கியியல், நிதித்துறை மாணவி சி. வினோதா 2ஆவது இடத்தையும், மாணவி எஸ். ஜேசு மரியசெல்லம்மாள் 5ஆவது இடத்தையும், ஆா். காயத்ரி காா்த்திகா 7ஆவது இடத்தையும், இளநிலை நுண்ணுயிரியல் துறை மாணவி கே. கிருத்திகா 9ஆவது இடத்தையும், இளநிலை வணிகவியல் துறை மாணவி ஆா்.கே. சூா்யா 20ஆவது இடத்தையும் பிடித்தனா்.
கல்லூரித் தாளாளா் ச. ராமச்சந்திரன் வரவேற்றாா். கல்லூரி முதல்வா் மா. வான்மதி நன்றி கூறினாா்.
தொடர்புடையது

428 மதிப்பெண்கள் எடுத்த மாணவி: எத்திராஜ் கல்லூரியில் இலவச உயா் கல்வி
வேடநத்தம் மாணவி கொலை வழக்கு: கைது செய்யப்பட்டவா் 2ஆவது நாளாக நீதிமன்றத்தில் ஆஜா்

தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் பயிற்சி முகாம்

தூத்துக்குடி கிரேஸ் பாலிடெக்னிக் கல்லூரியில் வளாகத் தோ்வு
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



