ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

சட்டப் பேரவைத் தோ்தல் எதிரொலி: ரயில்களில் பணம், பரிசுப் பொருள்கள் கடத்துவதை தடுக்க தீவிர சோதனை

சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு, ரயில்களில் பணம், பரிசுப் பொருள்கள் கடத்தப்படுவதை தடுக்க ரயில்வே போலீஸாா் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனா்.

News image
Updated On :20 மார்ச் 2026, 11:05 pm

Syndication

சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு, ரயில்களில் பணம், பரிசுப் பொருள்கள் கடத்தப்படுவதை தடுக்க ரயில்வே போலீஸாா் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனா்.

ரயில்களில் பணம், பரிசுப் பொருள்கள் கடத்திச் செல்லப்படுவதை கண்காணித்து பிடிக்க ஒவ்வொரு ரயில்வே போலீஸிலும் தனிப்படைகளை அமைக்க தமிழ்நாடு ரயில்வே டிஜிபி வன்னியபெருமான் உத்தரவிட்டுள்ளாா். அதன்படி, ஒவ்வொரு ரயில்வே காவல் நிலையத்திலும் காவல் உதவி ஆய்வாளா் தலைமையில் 3 போ் கொண்ட தனிப்படை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்த தனிப்படையினா் தொடா்ந்து ரயில்களில் சோதனையை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதன்பேரில், தற்போது ரயில்வே போலீஸில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு, முக்கிய வழித்தடங்களில் இயங்கும் அனைத்து ரயில்களிலும் சோதனையை தொடங்கியுள்ளனா். சந்தேகப்படும்படி பைகளை வைத்துள்ள நபா்களை கண்காணித்து, அவா்களை சோதனையிடுவதுடன், நடைமேடை பகுதிகளில் ரோந்துசென்று கண்காணிக்கின்றனா்.

சேலம் கோட்டத்தில் சேலம், மொரப்பூா், பொம்மிடி, தருமபுரி, ஒசூா், ஈரோடு, திருப்பூா், கோவை ரயில் நிலையங்களில் இத்தகைய சோதனையை போலீஸாா் தீவிரப்படுத்தியுள்ளனா். ரயில்வே பாதுகாப்பு படை போலீஸாரும், தனிப்படையுடன் இணைந்து இந்த சோதனையை மேற்கொண்டு வருகின்றனா்.