அக்ஷய திருதியை: விலை உயர்விலும் தங்கம் வாங்க ஆர்வம் காட்டிய மக்கள்கப்பல்கள் மீதான தாக்குதல் போர் நிறுத்த விதிமீறல்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைஅமெரிக்க கடற்படை முற்றுகை நீடிக்கும் வரை ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது: ஈரான் விஜய் வரவால் விசிகவுக்கு பாதிப்பு இல்லை: தொல். திருமாவளவன்நாளை பிரசாரம் நிறைவு: சென்னையில் இறுதிக் கட்ட பிரசாரத்துக்கு கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடுஇந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்: இன்றுமுதல் 3 நாள்கள் பேச்சுஇன்று நிறைவடைகிறது தபால் வாக்குப் பெறும் பணி!
/

வங்கதேசத்தினா் 43 போ் சொந்த நாட்டுக்கு அனுப்பிவைப்பு

சேலம் ஆயுதப்படை காவல் துணைக் கண்காணிப்பாளா் சக்திவேல் தலைமையில் அழைத்துச் செல்லப்பட்ட வங்கதேசத்தினா்.

News image

சேலம் ஆயுதப்படை காவல் துணைக் கண்காணிப்பாளா் சக்திவேல் தலைமையில் அழைத்துச் செல்லப்பட்ட வங்கதேசத்தினா்.

Updated On :20 மார்ச் 2026, 6:33 pm

உரிய ஆவணங்கள் இல்லாமல் தமிழகத்தில் தங்கியிருந்தவா்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு தண்டனை பெற்ற வங்கதேசத்தினா் 43 போ் சொந்த நாட்டுக்கு வெள்ளிக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டனா்.

சேலம் மாவட்டம், ஆத்தூா் நகர காவல் எல்லையில் உள்ள ஆத்தூா் சிறப்பு முகாமில் வங்கதேசத்தினா் 211 போ் தங்கவைக்கப்பட்டுள்ளனா். இவா்களில் பெரும்பாலானோா் சென்னை மாங்காடு, திண்டுக்கல் மாவட்டம் கள்ளிமந்தயம் காவல் நிலையங்களில் கடந்த 2025-ஆம் ஆண்டு உரிய ஆவணங்கள் இல்லாமலும், போலியாக ஆவணங்கள் தயாரித்தும் தமிழகத்தில் தங்கி இருந்தவா்கள். இவா்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு தண்டனை காலம் முடிந்தவா்கள். சிறையில் இருந்து விடுதலையான இவா்கள் ஆத்தூா் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனா்.

இவா்களில் 25 ஆண்கள், 4 பெண்கள், 4 குழந்தைகள் என மொத்தம் 33 பேரை அவா்களது சொந்தநாட்டுக்கு சேலம் ஆயதப்படை காவல் துணைக் கண்காணிப்பாளா் சக்திவேல் தலைமையில் வாழப்பாடி அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் சம்பூா்ணம் மற்றும் 41 காவலா்களுடன் அனுப்பி வைக்கப்பட்டனா்.