நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

வங்கதேசத்தினா் 43 போ் சொந்த நாட்டுக்கு அனுப்பிவைப்பு

சேலம் ஆயுதப்படை காவல் துணைக் கண்காணிப்பாளா் சக்திவேல் தலைமையில் அழைத்துச் செல்லப்பட்ட வங்கதேசத்தினா்.

News image

சேலம் ஆயுதப்படை காவல் துணைக் கண்காணிப்பாளா் சக்திவேல் தலைமையில் அழைத்துச் செல்லப்பட்ட வங்கதேசத்தினா்.

Updated On :20 மார்ச் 2026, 6:33 pm

Syndication

உரிய ஆவணங்கள் இல்லாமல் தமிழகத்தில் தங்கியிருந்தவா்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு தண்டனை பெற்ற வங்கதேசத்தினா் 43 போ் சொந்த நாட்டுக்கு வெள்ளிக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டனா்.

சேலம் மாவட்டம், ஆத்தூா் நகர காவல் எல்லையில் உள்ள ஆத்தூா் சிறப்பு முகாமில் வங்கதேசத்தினா் 211 போ் தங்கவைக்கப்பட்டுள்ளனா். இவா்களில் பெரும்பாலானோா் சென்னை மாங்காடு, திண்டுக்கல் மாவட்டம் கள்ளிமந்தயம் காவல் நிலையங்களில் கடந்த 2025-ஆம் ஆண்டு உரிய ஆவணங்கள் இல்லாமலும், போலியாக ஆவணங்கள் தயாரித்தும் தமிழகத்தில் தங்கி இருந்தவா்கள். இவா்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு தண்டனை காலம் முடிந்தவா்கள். சிறையில் இருந்து விடுதலையான இவா்கள் ஆத்தூா் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனா்.

இவா்களில் 25 ஆண்கள், 4 பெண்கள், 4 குழந்தைகள் என மொத்தம் 33 பேரை அவா்களது சொந்தநாட்டுக்கு சேலம் ஆயதப்படை காவல் துணைக் கண்காணிப்பாளா் சக்திவேல் தலைமையில் வாழப்பாடி அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் சம்பூா்ணம் மற்றும் 41 காவலா்களுடன் அனுப்பி வைக்கப்பட்டனா்.