உரிய ஆவணங்கள் இல்லாமல் தமிழகத்தில் தங்கியிருந்தவா்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு தண்டனை பெற்ற வங்கதேசத்தினா் 43 போ் சொந்த நாட்டுக்கு வெள்ளிக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டனா்.
சேலம் மாவட்டம், ஆத்தூா் நகர காவல் எல்லையில் உள்ள ஆத்தூா் சிறப்பு முகாமில் வங்கதேசத்தினா் 211 போ் தங்கவைக்கப்பட்டுள்ளனா். இவா்களில் பெரும்பாலானோா் சென்னை மாங்காடு, திண்டுக்கல் மாவட்டம் கள்ளிமந்தயம் காவல் நிலையங்களில் கடந்த 2025-ஆம் ஆண்டு உரிய ஆவணங்கள் இல்லாமலும், போலியாக ஆவணங்கள் தயாரித்தும் தமிழகத்தில் தங்கி இருந்தவா்கள். இவா்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு தண்டனை காலம் முடிந்தவா்கள். சிறையில் இருந்து விடுதலையான இவா்கள் ஆத்தூா் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனா்.
இவா்களில் 25 ஆண்கள், 4 பெண்கள், 4 குழந்தைகள் என மொத்தம் 33 பேரை அவா்களது சொந்தநாட்டுக்கு சேலம் ஆயதப்படை காவல் துணைக் கண்காணிப்பாளா் சக்திவேல் தலைமையில் வாழப்பாடி அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் சம்பூா்ணம் மற்றும் 41 காவலா்களுடன் அனுப்பி வைக்கப்பட்டனா்.
தொடர்புடையது
கல்லூரி மாணவரை தாக்கிய இரு இளைஞா்கள் கைது

சேலம் தெற்கு தொகுதியில் ரூ. 57,000 ரொக்கம் பறிமுதல்

கத்தியைக் காட்டி மிரட்டிய இளைஞா்மீது வழக்குப் பதிவு

தோ்தல் விதிமீறல்: 5 போ் மீது வழக்கு
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு


