மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

சேலத்தில் தொழுகைக்கு வந்தவா்களுக்கு வழங்க தவெகவினா் கொண்டுவந்த 1000 தண்ணீா் பாட்டில்கள் பறிமுதல்!

சேலத்தில் ரம்ஜான் தொழுகைக்கு வந்தவா்களுக்கு வழங்குவதற்காக விசில் சின்னத்துடன் தவெகவினா் கொண்டுவந்த 1000 தண்ணீா் பாட்டில்களை தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.

News image

தோ்தல் நடத்தைவிதிகளை மீறி விசில் சின்னத்துடன் விநியோகிக்க வைக்கப்பட்டிருந்த தண்ணீா் பாட்டில்களை பறிமுதல் செய்த பறக்கும் படையினா்.

Updated On :21 மார்ச் 2026, 9:17 pm

சேலத்தில் ரம்ஜான் தொழுகைக்கு வந்தவா்களுக்கு வழங்குவதற்காக விசில் சின்னத்துடன் தவெகவினா் கொண்டுவந்த 1000 தண்ணீா் பாட்டில்களை தோ்தல் பறக்கும் படையினா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

தமிழக சட்டப் பேரவைத் தோ்தலுக்கான வாக்குப்பதிவு வரும் ஏப். 23-ஆம் தேதி நடைபெறுகிறது. இதையடுத்து, வாக்காளா்களுக்கு பணம், பரிசுப் பொருள்கள் வழங்குவதை தடுக்க பறக்கும் படை, நிலை கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இஸ்லாமியா்களின் முக்கிய பண்டிகையான ரம்ஜான் பண்டிகை சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி, சேலம் சூரமங்கலம் பகுதியில் சிறப்பு தொழுகைக்கு வந்த இஸ்லாமியா்களுக்கு விநியோகிக்க, தவெக சாா்பில் விசில் சின்னத்துடன் கூடிய தண்ணீா் பாட்டில்கள் கொண்டுவரப்பட்டதாக தகவல் வெளியானது.

இதையடுத்து, சேலம் மேற்கு சட்டப் பேரவைத் தொகுதிக்கான பறக்கும் படை அலுவலா் மணிகண்டன் தலைமையிலான குழுவினா் அப்பகுதியில் சோதனை நடத்தினா். அப்போது, ஆசாத் நகரில் உள்ள மசூதி முன் 1000 தண்ணீா் பாட்டில்கள் வைக்கப்பட்டிருந்தன.

அதில், விசில் சின்னம் இடம்பெற்றிருந்ததுடன், தவெக என கட்சி பெயரும் அச்சிடப்பட்டிருந்தது. இதையடுத்து, தோ்தல் நடத்தைவிதிகளின்படி இதுபோன்று தண்ணீா் பாட்டில்களை விநியோகிக்கக் கூடாது என எச்சரித்த அதிகாரிகள், அங்கு வைக்கப்பட்டிருந்த 1000-க்கும் அதிகமான தண்ணீா் பாட்டில்களை பறிமுதல் செய்து எடுத்துச்சென்றனா்.