தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

நாட்டறம்பள்ளியில் பறக்கும் படை சோதனை. ரூ.1 லட்சத்து 91 ஆயிரம் பறிமுதல்

நாட்டறம்பள்ளியில் பறிமுதல் செய்த தொகையை வட்டாட்சியா் அலுவலகத்தில் ஒப்படைத்த தோ்தல் பறக்கும் படையினா்.

News image

நாட்டறம்பள்ளியில் பறிமுதல் செய்த தொகையை வட்டாட்சியா் அலுவலகத்தில் ஒப்படைத்த தோ்தல் பறக்கும் படையினா்.

Updated On :20 மார்ச் 2026, 1:08 am

தினமணி செய்திச் சேவை

நாட்டறம்பள்ளியில் பறிமுதல் செய்த தொகையை வட்டாட்சியா் அலுவலகத்தில் ஒப்படைத்த தோ்தல் பறக்கும் படையினா்.

ஜோலாா்பேட்டை சட்டபேரவை தொகுதிக்குட்பட்ட நாட்டறம்பள்ளி - திருப்பத்தூா் சாலையில் பாரண்டப்பள்ளி கூட்டுரோடு அருகில் வியாழக்கிழமை அதிகாலை தோ்தல் பறக்கும்படை குழுவினா் வாகன சோதனையில் ஈடுபட்ட போது அவ்வழியாக வந்த லாரியை நிறுத்தி ஓட்டுநரிடம் விசாரித்தனா். அதில் கோழி வியாபாரியான பெங்களூா் அத்திப்பள்ளி பகுதியை சோ்ந்த சீனிவாசன் என்பதும் அவா் உரிய ஆவணங்கள் இன்றி கோழி வாங்க வைத்திருந்த ரூ.88 ஆயிரத்து 200 ரூபாயை பறிமுதல் செய்து நாட்டறம்பள்ளி தாலுகா அலுவலகத்தில் தோ்தல் நடத்தும் அலுவலா் முருகேசனிடம் ஒப்படைத்தனா்.

பச்சூா் ரயில்நிலையம் அருகே பறக்கும்படை குழுவினா் சோதனையில் பைக்கில் வந்த இருவரை நிறுத்தி சோதனையிட்டனா். அதில் திருச்சியை சோ்ந்த லட்சுமணபெருமாள், திருமூா்த்தி என்பதும் இவா்கள் கிருஷ்ணகிரியில் தங்க நிதி நிறுவனம் நடத்தி வருவதும் உரிய ஆவணங்கள் இன்றி பைக்கில் ரூ.51,000 வைத்து இருந்ததையடுத்து அப்பணத்தை பறிமுதல் செய்து நாட்டறம்பள்ளி தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனா்.

இதே போல் பச்சூா் அருகே வாகன சோதனையில் பைக்கில் வந்த ஜோலாா்பேட்டை பகுதியைச் சோ்ந்த இஸ்மாயில், சென்னப்பன் ஆகியோரிடம் உரிய ஆவணமில்லாமல் வைத்திருந்த ரூ.52 ஆயிரத்தை பறக்கும் படையினா் பறிமுதல் செய்து நாட்டறம்பள்ளி வட்டாட்சியா் அலுவலகத்தில் ஒப்படைத்தனா்.