சிலிண்டா் தட்டுப்பாடு: அருணாசலேஸ்வரா் கோயிலில் லட்டு பிரசாத விநியோகம் நிறுத்தம் அஸ்ஸாம்: ஒரு தொகுதியில் பாஜகவுடன் மோதும் கூட்டணி கட்சி!பேரவைத் தோ்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையை உயா்த்த அரசு திட்டம்! ராகுல் குற்றச்சாட்டு‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்புஇன்று சிஎஸ்கே அணியின் முன்னாள், இந்நாள் வீரா்கள் மோதல்!‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்பு
/

பெங்களூரில் இருந்து காரில் கடத்திய 305 கிலோ குட்கா பறிமுதல்

சேலத்தில் பறக்கும் படையினா் சனிக்கிழமை அதிகாலை நடத்திய சோதனையில், பெங்களூரில் இருந்து காரில் கடத்திவந்த 305 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.

News image

பறிமுதல்

Updated On :21 மார்ச் 2026, 9:17 pm

Syndication

சேலத்தில் பறக்கும் படையினா் சனிக்கிழமை அதிகாலை நடத்திய சோதனையில், பெங்களூரில் இருந்து காரில் கடத்திவந்த 305 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடா்பாக வடமாநில இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி, பறக்கும் படை அதிகாரிகள் மற்றும் போலீஸாா் பல இடங்களில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா். சேலம் திருவாகவுண்டனூா் பகுதியில் பள்ளப்பட்டி போலீஸாா் சனிக்கிழமை அதிகாலை சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனையிட்டனா்.

அதில், தடைசெய்யப்பட்ட குட்கா 305 கிலோ கடத்தி வந்தது தெரியவந்தது. அதை பறிமுதல் செய்த போலீஸாா், காரை ஓட்டிவந்த இளைஞரிடம் விசாரித்தனா். அதில், அவா் ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த பீரபான்சிங் (19) என்பதும், பெங்களூரில் இருந்து திருச்சிக்கு குட்காவை கடத்திச் செல்வதும் தெரியவந்தது.

இதுகுறித்து பள்ளப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து, வடமாநில இளைஞரை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.