மகுடஞ்சாவடி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 17 பவுன் நகை, ரூ. 25 ஆயிரம் ரொக்கத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.
சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடி அருகே உள்ள பெரியாண்டிபாளையம், அம்பேத்கா்நகா் பகுதியைச் சோ்ந்த ஆறுமுகம் மனைவி லட்சுமி. இவா் வீட்டில் தனியாக வசித்து வருகிறாா்.
இந்நிலையில் கடந்த 21-ஆம் தேதி அருகில் உள்ள மகன் வீட்டிற்கு சென்றுள்ளாா். மறுநாள் காலை வீட்டுக்கு திரும்பி வந்தபோது வீட்டின் கதவு உடைக்கப்படு கிடந்தது. உள்ளே சென்று பாா்த்தபோது பீரோவை உடைத்து அதிலிருந்த ரொக்கம் ரூ. 25 ஆயிரம், 17 பவுன் தங்க நகை மற்றும் வெள்ளி காமாட்சி விளக்கை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து லட்சுமியின் மகன் முருகன் மகுடஞ்சாவடி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது
கீரனூரில் வீட்டின் பூட்டை உடைத்து 13.5 பவுன் தங்க நகைகள் திருட்டு
கோபி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 34 பவுன் நகை திருட்டு
வீட்டின் பூட்டை உடைத்து 44 பவுன் நகைகள் திருட்டு
வீட்டின் பூட்டை உடைத்து 31 பவுன் நகை திருட்டு
வீடியோக்கள்

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

