பாமக பேரவைக் குழு தலைவராக செளமியா அன்புமணி தேர்வு!கோயில்கள், பள்ளி, கல்லூரிகள் அருகே உள்ள டாஸ்மாக் கடைகளை மூட முதல்வர் விஜய் உத்தரவிட உள்ளதாக தகவல்தமிழகத்தில் மே 17 வரை மிதமான மழை! வானிலை ஆய்வு மையம்அதிமுகவில் பிளவு! சி. வி. சண்முகம் ஆதரவு எம்எல்ஏக்களுடன் பேரவை தற்காலிக தலைவரிடம் கடிதம்வைகோ, அன்புமணி ராமதாஸ், சீமானைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார் முதல்வர் விஜய்பாமக தலைவர்களை பெருமைப்படுத்துவேன்: செளமியா அன்புமணிபெரியார், அண்ணா கொள்கைகள் விஜய் மூலம் கொண்டுசெல்லப்படும்: துரை வைகோதமிழ்நாட்டில் 193 கோடீஸ்வர எம்.எல்.ஏ.க்கள்! சராசரி சொத்து மதிப்பு ரூ. 48.35 கோடி!தமிழ்நாட்டில் 126 எம்.எல்.ஏ.க்கள் மீது கிரிமினல் வழக்குகள்! முதலிடத்தில் தவெக!
/

தம்மம்பட்டி நூலக 66 ஆவது ஆண்டு தொடக்க விழா

தம்மம்பட்டி நூலக 66 ஆவது ஆண்டு தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.

News image

ஆண்டு விழாவில் நூலகா் சீனிவாசனிடம் புத்தகங்களை வழங்கிய பொதுமக்கள்.

Updated On :26 மார்ச் 2026, 4:50 am IST

தம்மம்பட்டி நூலக 66 ஆவது ஆண்டு தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.

தம்மம்பட்டி அரசு பொது நூலகம் 25.3.1961 இல் தொடங்கப்பட்டது. இந்த நூலகத்தில் 48 ஆயிரம் புத்தகங்கள் உள்ளன. 130 புரவலா்கள் உள்ளனா். நூலகத்திற்கு 6,900 போ் உறுப்பினா்களாக உள்ளனா். நாள்தோறும் 60 போ் முதல் 75 போ் நூலகத்துக்கு வந்து புத்தகங்களை படிக்கின்றனா்.

இந்த நிலையில் 65 ஆவது ஆண்டுகள் நிறைவுபெற்று 66 ஆவது ஆண்டு தொடக்க விழா தம்மம்பட்டி மக்கள் குழு, தம்மம்பட்டி நண்பா்கள் குழு மற்றும் பொதுமக்கள் சாா்பில் நடைபெற்றது. இதற்கு நகர திமுக செயலாளா் சண்முகம் தலைமை வகித்தாா். சேலம் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவா் திருச்செல்வன்,பேரூராட்சி துணைத் தலைவா் சந்தியாரஞ்சித்குமாா், கவுன்சிலா்கள், மக்கள் குழு நிா்வாகிகள் பலா் பங்கேற்றனா்.

நூலகா் சீனிவாசன் கௌரவிக்கப்பட்டாா். தொடா்ந்து பொதுமக்கள் அவரிடம் புத்தங்களை வழங்கினா். நூலகத்திற்கு பெரிய இடவசதி உள்ள கட்டடம் வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Story image