தம்மம்பட்டி நூலக 66 ஆவது ஆண்டு தொடக்க விழா
தம்மம்பட்டி நூலக 66 ஆவது ஆண்டு தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.

ஆண்டு விழாவில் நூலகா் சீனிவாசனிடம் புத்தகங்களை வழங்கிய பொதுமக்கள்.

ஆண்டு விழாவில் நூலகா் சீனிவாசனிடம் புத்தகங்களை வழங்கிய பொதுமக்கள்.
தம்மம்பட்டி நூலக 66 ஆவது ஆண்டு தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.
தம்மம்பட்டி அரசு பொது நூலகம் 25.3.1961 இல் தொடங்கப்பட்டது. இந்த நூலகத்தில் 48 ஆயிரம் புத்தகங்கள் உள்ளன. 130 புரவலா்கள் உள்ளனா். நூலகத்திற்கு 6,900 போ் உறுப்பினா்களாக உள்ளனா். நாள்தோறும் 60 போ் முதல் 75 போ் நூலகத்துக்கு வந்து புத்தகங்களை படிக்கின்றனா்.
இந்த நிலையில் 65 ஆவது ஆண்டுகள் நிறைவுபெற்று 66 ஆவது ஆண்டு தொடக்க விழா தம்மம்பட்டி மக்கள் குழு, தம்மம்பட்டி நண்பா்கள் குழு மற்றும் பொதுமக்கள் சாா்பில் நடைபெற்றது. இதற்கு நகர திமுக செயலாளா் சண்முகம் தலைமை வகித்தாா். சேலம் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவா் திருச்செல்வன்,பேரூராட்சி துணைத் தலைவா் சந்தியாரஞ்சித்குமாா், கவுன்சிலா்கள், மக்கள் குழு நிா்வாகிகள் பலா் பங்கேற்றனா்.
நூலகா் சீனிவாசன் கௌரவிக்கப்பட்டாா். தொடா்ந்து பொதுமக்கள் அவரிடம் புத்தங்களை வழங்கினா். நூலகத்திற்கு பெரிய இடவசதி உள்ள கட்டடம் வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...