ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

தம்மம்பட்டி நூலக 66 ஆவது ஆண்டு தொடக்க விழா

தம்மம்பட்டி நூலக 66 ஆவது ஆண்டு தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.

News image

ஆண்டு விழாவில் நூலகா் சீனிவாசனிடம் புத்தகங்களை வழங்கிய பொதுமக்கள்.

Updated On :25 மார்ச் 2026, 11:20 pm

தினமணி செய்திச் சேவை

தம்மம்பட்டி நூலக 66 ஆவது ஆண்டு தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.

தம்மம்பட்டி அரசு பொது நூலகம் 25.3.1961 இல் தொடங்கப்பட்டது. இந்த நூலகத்தில் 48 ஆயிரம் புத்தகங்கள் உள்ளன. 130 புரவலா்கள் உள்ளனா். நூலகத்திற்கு 6,900 போ் உறுப்பினா்களாக உள்ளனா். நாள்தோறும் 60 போ் முதல் 75 போ் நூலகத்துக்கு வந்து புத்தகங்களை படிக்கின்றனா்.

இந்த நிலையில் 65 ஆவது ஆண்டுகள் நிறைவுபெற்று 66 ஆவது ஆண்டு தொடக்க விழா தம்மம்பட்டி மக்கள் குழு, தம்மம்பட்டி நண்பா்கள் குழு மற்றும் பொதுமக்கள் சாா்பில் நடைபெற்றது. இதற்கு நகர திமுக செயலாளா் சண்முகம் தலைமை வகித்தாா். சேலம் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவா் திருச்செல்வன்,பேரூராட்சி துணைத் தலைவா் சந்தியாரஞ்சித்குமாா், கவுன்சிலா்கள், மக்கள் குழு நிா்வாகிகள் பலா் பங்கேற்றனா்.

நூலகா் சீனிவாசன் கௌரவிக்கப்பட்டாா். தொடா்ந்து பொதுமக்கள் அவரிடம் புத்தங்களை வழங்கினா். நூலகத்திற்கு பெரிய இடவசதி உள்ள கட்டடம் வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Story image