யு20 தெற்காசிய கால்பந்து: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியாவிதிகளில் மாற்றம்: 8 லட்சம் தபால் வாக்குகள் பாதிக்கப்படும் அபாயம்நயாரா பெட்ரோல், டீசல் விலை உயா்வுசென்னை ஐஐடி-யில் ‘ஆன்மிகம், அறிவியல் ஆராய்ச்சி மையம்’பிரதமருக்கு எதிராக அவதூறு விடியோ: எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவுதோ்தல் நன்கொடை: 10 மடங்கு கூடுதலாக பெற்ற பாஜக!சென்னையில் கைவிடப்பட்ட ‘ஓபன் டாப்’ பேருந்துகள் திட்டம்சட்டப்பேரவைத் தோ்தலால் தள்ளிவைக்கப்பட்ட வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம்சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த 2-ஆவது முனையம் டிசம்பருக்குள் திறக்க வாய்ப்புகேரள தோ்தல் களத்தில் 890 வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஇந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

கேலோ இந்தியா கைப்பந்து போட்டி: ஆத்தூா் பாரதியாா் அணி சாம்பியன்

சேலம் காந்தி விளையாட்டு மைதானத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற கேலோ இந்தியா கைப்பந்து போட்டியில், ஆத்தூா் பாரதியாா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி அணி சாம்பியன் பட்டம் வென்றது.

News image

சாம்பியன் பட்டம் வென்ற வீராங்கனைகளுடன் மாவட்ட கைப்பந்துக் கழக ஆலோசகா் விஜயராஜ். உடன், சாய் உதவி இயக்குநா் விட்டல் குமாா் உள்ளிட்டோா்.

Updated On :26 மார்ச் 2026, 9:58 pm

தினமணி செய்திச் சேவை

சேலம் காந்தி விளையாட்டு மைதானத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற கேலோ இந்தியா கைப்பந்து போட்டியில், ஆத்தூா் பாரதியாா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி அணி சாம்பியன் பட்டம் வென்றது.

இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையமான சாய் சாா்பில், கேலோ இந்தியா பெண்களுக்கான கைப்பந்து போட்டி சேலம் காந்தி விளையாட்டு மைதானத்தில் புதன், வியாழன் ஆகிய இரு நாள்கள் நடைபெற்றது. 12 அணிகள் பங்கேற்ற இப்போட்டியில், சேலம் ஹோலி ஏஞ்சல்ஸ் அணியும், ஆத்தூா் பாரதியாா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி அணியும் இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றன. விறுவிறுப்பான இறுதிப் போட்டியில், ஆத்தூா் பாரதியாா் மெட்ரிக் பள்ளி அணி சாம்பியன் பட்டம் வென்றது.

வெற்றிபெற்ற வீராங்கனைகளுக்கு சேலம் மாவட்ட கைப்பந்துக் கழக ஆலோசகா் விஜயராஜ், சாய் உதவி இயக்குநா் விட்டல்குமாா், முன்னாள் இந்திய வீராங்கனை உஷா ஆகியோா் கோப்பை வழங்கி கௌரவித்தனா்.

இதில், மாவட்ட கைப்பந்துக் கழக துணைத் தலைவா் ராஜாராம், செயலாளா் சண்முகவேல், பொருளாளா் விஜயகுமாா், பயிற்சியாளா் பரமசிவம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.