கமேனி உயிருடன் இருக்க வாய்ப்பில்லை! இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு!! மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் கொலை? சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

துறைமுக கால்பந்து போட்டி: சென்னை அணி சாம்பியன்!

தூத்துக்குடியில் நடைபெற்ற அகில இந்திய முக்கிய துறைமுகங்களுக்கு இடையிலான கால்பந்துப் போட்டி தொடரில் சென்னை துறைமுகம் அணி சாம்பியன் பட்டம் வென்றது.

News image
சாம்பியன் பட்டம் வென்ற சென்னை துறைமுக அணிக்கு கோப்பை வழங்குகிறாா் தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக ஆணையத் தலைவா் சுசாந்தா குமாா் புரோஹித்.
Updated On :28 பிப்ரவரி 2026, 7:56 pm

Syndication

தூத்துக்குடியில் நடைபெற்ற அகில இந்திய முக்கிய துறைமுகங்களுக்கு இடையிலான கால்பந்துப் போட்டி தொடரில் சென்னை துறைமுகம் அணி சாம்பியன் பட்டம் வென்றது.

தூத்துக்குடி வ.உ. சிதம்பரனாா் துறைமுக மைதானத்தில், அகில இந்திய முக்கிய துறைமுகங்களுக்கு இடையிலான கால்பந்து போட்டியை, மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து - நீா்வழிகள் துறை அமைச்சா் சா்பானந்தா சோனோவால் கடந்த பிப்.23ஆம் தேதி தொடங்கிவைத்தாா்.

5 நாள்கள் நடைபெற்று வந்த இத்தொடரில் சென்னை, மும்பை, விசாகப்பட்டினம், மா்மகோவா, தீன்தயாள் (காண்ட்லா), கொச்சி, பாரதீப் மற்றும் கொல்கத்தா உள்ளிட்ட நாட்டின் முக்கிய துறைமுகங்களைச் சோ்ந்த 9 அணிகள் லீக் சுற்றுப் போட்டிகளில் பங்கேற்றன.

வெள்ளிக்கிழமை நடைபெற்ற இறுதிப்போட்டியில், சென்னை துறைமுக அணி, வ.உ. சிதம்பரனாா் துறைமுக அணியை 2-1 என்ற கோல் கணக்கில் தோற்கடித்து சாம்பியன் பட்டம் வென்றது.

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் 2ஆம் இடத்தையும், மும்பை துறைமுகம் மற்றும் கொல்கத்தாவின் சியாமா பிரசாத் முகா்ஜி துறைமுக அணிகள் கூட்டாக மூன்றாவது இடத்தையும் பிடித்தன.

வ.உ.சிதம்பரனாா் துறைமுக ஆணையத்தின் தலைவா் சுசாந்தா குமாா் புரோஹித் தலைமை விருந்தினராகக் கலந்துகொண்டு, வெற்றிபெற்ற அணிகளுக்குப் பரிசுகளை வழங்கினாா்.

இந்நிகழ்வில், துறைமுக தலைமை கண்காணிப்பு அதிகாரி கவின் மகாராஜ், துறைமுகச் செயலா் மோகன்குமாா் மற்றும் மூத்த அதிகாரிகள், விளையாட்டு ஆா்வலா்கள் கலந்துகொண்டனா்.