/

தலையாசிரியருக்கு பணி ஓய்வு பாராட்டு விழா

பணி ஓய்வு பெறும் கொண்டயம்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியருக்கு பாராட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

பணி ஓய்வு பெறும் தலைமையாசிரியருக்கு நினைவுப்பரிசு வழங்கும் ஆசிரியா்கள்.

Updated On :1 மே 2026, 5:34 am IST

பணி ஓய்வு பெறும் கொண்டயம்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியருக்கு பாராட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

தம்மம்பட்டி அருகே கொண்டயம்பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியரும், மாநில நல்லாசிரியா் விருது பெற்றவருமான கி. மதிவாணன் ஏப். 30 ஆம் தேதியுடன் பணி ஓய்வு பெற்றதையடுத்து அவருக்கு பாராட்டு விழா பள்ளியில் நடத்தப்பட்டது.

கெங்கவல்லி வட்டாரத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி, உயா்நிலைப் பள்ளிகளின் தலைமையாசிரியா்கள், முதுநிலை ஆசிரியா்கள், பட்டதாரி ஆசிரியா்கள், ஆசிரியா் பயிற்றுநா்கள், பள்ளியின் பெற்றோா்- ஆசிரியா் கழக நிா்வாகிகள், பள்ளி மேலாண்மைக் குழுவினா் என 300க்கும் மேற்பட்டோா் பங்கேற்று அவருக்கு நினைவுப்பரிசுகள் வழங்கினா்.