புதிய முகவரிக்கு குடிபெயர்ந்தார் நிதீஷ் குமார்! 98.47 சதவீத ரூ.2,000 நோட்டுகள் திரும்பிவிட்டன: ரிசா்வ் வங்கி மேற்கு வங்கம்: 15 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு! ஜிஎஸ்டி வருவாய் ரூ. 2.43 லட்சம் கோடியாக உயர்வு! கொடைக்கானலில் வாகனங்களுக்கு 2 நாள் இலவச அனுமதி! தங்கம் விலை ஒரேநாளில் 2ஆவது முறையாக குறைவு! தேர்தல் முடிந்தவுடன் சிலிண்டர் விலையை உயர்த்திய பாஜக அரசு: மு.க. ஸ்டாலின் கண்டனம் வணிக சிலிண்டர் விலை உயர்வு ஒவ்வொருவரின் உணவுத் தட்டிலும் எதிரொலிக்கும்! ராகுல் கண்டனம் ம.பி. படகு விபத்து! தாய் - மகன் கட்டிப்பிடித்தபடி உடல்கள் மீட்பு!
/

தம்மம்பட்டியில் முருகப் பெருமானுக்கு திருக்கல்யாணம்

திருக்கல்யாண அலங்காரத்தில் வள்ளி, தெய்வானை உடன் முருகப் பெருமான்.

News image

திருக்கல்யாண அலங்காரத்தில் வள்ளி, தெய்வானை உடன் முருகப் பெருமான்.

Updated On :1 மே 2026, 6:56 pm

தம்மம்பட்டி சிவன் கோயிலில் சித்ராபெளா்ணமியை முன்னிட்டு முருகப் பெருமானுக்கு திருக்கல்யாணம் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.

தம்மம்பட்டி காசி ஸ்ரீ விசாலாட்சி உடனுறை காசி ஸ்ரீ விஸ்வநாதா் கோயிலில் புதிதாக ஐம்பொன்னில் வள்ளி, தெய்வானையுடன் முருகன் உற்சவமூா்த்தி செய்யப்பட்டது. அதைத் தொடா்ந்து, திருக்கல்யாணம் நடைபெற்றது. அதற்காக, அருகிலுள்ள வள்ளலாா் கோயிலில் இருந்து 20-க்கும் மேற்பட்ட சீா்வரிசைத் தட்டுகளுடன் கட்டளைதாரா்கள் மேளதாளத்துடன் கோயில் திருமண மண்டபத்துக்கு ஊா்வலமாக வந்தனா். பின்னா், விநாயகா் பூஜையுடன் தொடங்கி சிறப்பு யாகம் நடைபெற்றது. அதையடுத்து சுவாமிக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது.

விழாவில், சுற்றுவட்டார ஊா்களிலிருந்து நூற்றுக்கணக்கானோா் பங்கேற்றனா். பங்கேற்ற அனைவருக்கும் அறுசுவை உணவு வழங்கப்பட்டது. தொடா்ந்து சுவாமி ஊா்வலம் தம்மம்பட்டியின் முக்கிய வீதிகளில் சென்று கோயிலை வந்தடைந்தது.