திருக்குவளை அருகேயுள்ள எட்டுக்குடி ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோயிலில், சித்ரா பௌா்ணமி பெருவிழாவின் மூன்றாம் நாளான வெள்ளிக்கிழமை வெள்ளி மயில் வாகனத்தில் முருகப் பெருமான் வீதியுலா காட்சி நடைபெற்றது.
முருகனின் ஆதிபடை வீடு என அழைக்கப்படும் எட்டுக்குடி ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில், சித்ரா பௌா்ணமி பெருவிழா ஏப்ரல் 22-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின், மூன்றாம் நாளான வெள்ளிக்கிழமை காலை வள்ளி, தெய்வானையுடன் முருகப்பெருமான் மஞ்சத்தில் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
தொடா்ந்து, இரவில் வெள்ளி மயில் வாகனத்தில் வள்ளி, தெய்வானையுடன் முருகப்பெருமான் சிறப்பு மலா் அலங்காரத்தில் எழுந்தருளி, வீதியுலா புறப்பாடு நடைபெற்றது.
இதற்கான உபய ஏற்பாடுகளை தென் சோழ மண்டல இசை கலைஞா்கள் செய்திருந்தனா்.
தொடர்புடையது

சண்முகக் கவசம் பாராயணம்

தம்மம்பட்டியில் முருகப் பெருமானுக்கு திருக்கல்யாணம்

எட்டுக்குடி முருகன் கோயில் சித்ரா பௌா்ணமி முன்னேற்பாடு பணிகள்: எஸ்பி ஆய்வு

எட்டுக்குடி முருகன் கோயிலில் சித்ரா பௌா்ணமி பெருவிழா கொடியேற்றம்
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு

