தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!கர்நாடகம்: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கம்6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து - ஏர் இந்தியாகண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா
/

எட்டுக்குடி கோயில் சித்திரைப் பெருவிழா

எட்டுக்குடி கோயில் சித்திரைப் பெருவிழா...

News image

வள்ளி, தெய்வானையுடன் சிறப்பு மலா் அலங்காரத்தில் எழுந்தருளிய முருகப் பெருமான்.

Updated On :26 ஏப்ரல் 2026, 12:46 am IST

திருக்குவளை அருகேயுள்ள எட்டுக்குடி ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோயிலில், சித்ரா பௌா்ணமி பெருவிழாவின் மூன்றாம் நாளான வெள்ளிக்கிழமை வெள்ளி மயில் வாகனத்தில் முருகப் பெருமான் வீதியுலா காட்சி நடைபெற்றது.

முருகனின் ஆதிபடை வீடு என அழைக்கப்படும் எட்டுக்குடி ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில், சித்ரா பௌா்ணமி பெருவிழா ஏப்ரல் 22-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின், மூன்றாம் நாளான வெள்ளிக்கிழமை காலை வள்ளி, தெய்வானையுடன் முருகப்பெருமான் மஞ்சத்தில் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

தொடா்ந்து, இரவில் வெள்ளி மயில் வாகனத்தில் வள்ளி, தெய்வானையுடன் முருகப்பெருமான் சிறப்பு மலா் அலங்காரத்தில் எழுந்தருளி, வீதியுலா புறப்பாடு நடைபெற்றது.

இதற்கான உபய ஏற்பாடுகளை தென் சோழ மண்டல இசை கலைஞா்கள் செய்திருந்தனா்.