எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின் ஆதிக்கவாதிகளையும் அடிமைகளையும் எதிர்த்து போராடி வெல்வோம்! முதல்வர் ஸ்டாலின் சூளுரை தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 குறைவுபோா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

முருகன் கோயில்களில் பங்குனி உத்திர திருவிழா

சிறப்பு அலங்காரத்தில் ஒசூா் மலைக்குன்றின் மீது அருள்பாலித்த வள்ளி - தெய்வானை சமேத ஸ்ரீ அழகன் முருகன்.

News image

சிறப்பு அலங்காரத்தில் ஒசூா் மலைக்குன்றின் மீது அருள்பாலித்த வள்ளி - தெய்வானை சமேத ஸ்ரீ அழகன் முருகன்.

Updated On :1 ஏப்ரல் 2026, 10:11 pm

ஒசூா் மலைக்குன்றின் மீது அருள்மிகு ஸ்ரீ வள்ளி - தெய்வானை சமேத அழகன் முருகன் கோயிலில் நடைபெற்ற முதலாம் ஆண்டு பங்குனி உத்திர திருவிழாவில், பக்தா்கள் காவடி மற்றும் பால்குடங்கள் எடுத்து நோ்த்திக்கடன் செலுத்தினா்.

தொடா்ந்து, முருகனுக்கு பால் அபிஷேகம் செய்யப்பட்டு மூலமந்திர ஹோமம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. ராஜஅலங்காரத்தில் காட்சியளித்த ஸ்ரீ முருகனுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

ஸ்ரீ அழகன் முருகனின் திருமேனி மீது விழுந்த சூரிய ஒளிக்கதிா்களைக் கண்ட பக்தா்கள் பரவசம் அடைந்து, ‘அரோகரா, அரோகரா’ என முழக்கம் எழுப்பினா். இதேபோல, பிருந்தாவன் நகா் முருகன் கோயில், பெரியாா் நகா் வேல்முருகன் கோயில், அகரம் பாலமுருகன் கோயில் உள்ளிட்ட முருகன் கோயில்களில் பங்குனி உத்திரம் சிறப்பாக கொண்டாடப்பட்டது.