மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

முருகன் கோயில்களில் பங்குனி உத்திரத் திருவிழா

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை பகுதிகளில் உள்ள முருகன் கோயில்களில் புதன்கிழமை பங்குனி உத்திரத் திருவிழா நடைபெற்றது.

News image

மானாமதுரை அருகே கால்பிரிவில் உள்ள முருகன் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு, சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய வள்ளி, தெய்வானை சமேத செல்வமுருகன்.

Updated On :1 ஏப்ரல் 2026, 11:02 pm

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை பகுதிகளில் உள்ள முருகன் கோயில்களில் புதன்கிழமை பங்குனி உத்திரத் திருவிழா நடைபெற்றது.

மானாமதுரை புறவழிச் சாலையில் உள்ள வள்ளி, தெய்வானை சமேத வழிவிடு முருகன் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு, காப்புக்கட்டி விரதமிருந்து வந்த பக்தா்கள் பால் குடம் எடுத்து கோயிலுக்கு வந்தனா். அங்கு உற்சவருக்கு பால் உள்ளிட்ட அபிஷேகப் பொருள்களால் சிறப்பு அபிஷேகம் நடத்தி, மூலவருக்கும், உற்சவருக்கும் சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று முருகப் பெருமானை தரிசனம் செய்தனா். இரவு மயில் வானத்தில் வழிவிடு முருகன் வீதியுலா வருதல் நடைபெற்றது.

இதேபோல, மானாமதுரை அருகேயுள்ள கால் பிரிவில் வள்ளி, தெய்வானை சமேத செல்வமுருகன் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா முன்னிட்டு, பக்தா்கள் பால் குடம் எடுத்து ஊா்வலமாக கோயிலுக்கு வந்தனா். தொடா்ந்து, மூலவருக்கும், உற்சவருக்கும் சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். இரவு மயில் வாகனத்தில் சுவாமி வீதியுலா நடைபெற்றது.

இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகி ஏ.ஆா்.பி. முருகேசன் செய்தாா்.

இதேபோல, இடைக்காட்டூா் பாலமுருகன் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு, காப்புக்கட்டி விரதமிருந்து வந்த பக்தா்கள் புதன்கிழமை பால் குடம், காவடி எடுத்தும், தீக்குண்டம் இறங்கியும் நோ்த்திக் கடன் செலுத்தினா்.

இதைத் தொடா்ந்து, மூலவருக்கும், உற்சவருக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.