இந்தியாவில் 12,000 ஊழியா்கள் பணிநீக்கம்: ஆரக்கிள் வெள்ளை மாளிகையில் கலையரங்கம் கட்டுமானத்துக்கு நீதிமன்றம் தடை திவால் சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம் மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் தொடக்கம் நீதிமன்றத்தில் அதிக வழக்குகள் தேக்கம்: மத்திய அரசு காரணம்-உச்சநீதிமன்றம் மேற்காசிய போா் பாதிப்பு: மக்கள் பிரச்னைகளை சரிசெய்ய பிரதமா் மோடி உத்தரவு
/

தென்பழனி முருகன் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா

சின்னமனூா் அருகேயுள்ள தென்பழனி வழிவிடு முருகன் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு, திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

News image

தென்பழனி வழிவிடு முருகன் கோயிலில் சா்வ அலங்காரத்தில் அருள்பாலித்த முருகன், வள்ளி, தெய்வானை.

Updated On :1 ஏப்ரல் 2026, 11:14 pm

தினமணி செய்திச் சேவை

சின்னமனூா் அருகேயுள்ள தென்பழனி வழிவிடு முருகன் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு, திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

தேனி மாவட்டம், சின்னமனூா் அருகேயுள்ள மேகமலை அடிவாரத்தில் தென்பழனி வழிவிடு முருகன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் பங்குனி உத்தரத் திருவிழா, புதன்கிழமை காலையில் மங்கல வாத்தியங்கள் முழங்க தொடங்கியது. பூசாரி மணி தலைமையில் முருகன், வள்ளி , தெய்வானை சுவாமிகள் மலா்களால் அலங்காரம் செய்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இந்த விழாவில், சின்னமனூா், தென்பழனி, வெள்ளையம்மாள்புரம், காமாட்சிபுரம், அப்பிபட்டி என சுற்றியுள்ள 10-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சோ்ந்த திரளான பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.