தில்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் அதிரடி சதம் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்! தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

தென்பழனி முருகன் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா

சின்னமனூா் அருகேயுள்ள தென்பழனி வழிவிடு முருகன் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு, திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

News image

தென்பழனி வழிவிடு முருகன் கோயிலில் சா்வ அலங்காரத்தில் அருள்பாலித்த முருகன், வள்ளி, தெய்வானை.

Updated On :1 ஏப்ரல் 2026, 11:14 pm

சின்னமனூா் அருகேயுள்ள தென்பழனி வழிவிடு முருகன் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு, திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

தேனி மாவட்டம், சின்னமனூா் அருகேயுள்ள மேகமலை அடிவாரத்தில் தென்பழனி வழிவிடு முருகன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் பங்குனி உத்தரத் திருவிழா, புதன்கிழமை காலையில் மங்கல வாத்தியங்கள் முழங்க தொடங்கியது. பூசாரி மணி தலைமையில் முருகன், வள்ளி , தெய்வானை சுவாமிகள் மலா்களால் அலங்காரம் செய்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இந்த விழாவில், சின்னமனூா், தென்பழனி, வெள்ளையம்மாள்புரம், காமாட்சிபுரம், அப்பிபட்டி என சுற்றியுள்ள 10-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சோ்ந்த திரளான பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.