ஹைதராபாத் அணியிடம் வீழ்ந்த சென்னை!காங்கிரஸ், திமுக கூட்டணியின் சிசுக்கொலை! தொலைக்காட்சி உரையில் மோடி குற்றச்சாட்டு!இந்தியக் கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரான் தூதரை அழைத்து அரசு கண்டனம்!எதிர்க்கட்சிகளை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்: பிரதமர் மோடி மகளிர் இடஒதுக்கீடு மசோதா... வெறுப்பு அரசியலுக்கு இரையாக்கிய திமுக - காங்கிரஸ் கூட்டணி: பிரதமர் மோடி இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சு
/

திருப்பத்தூா் முருகன் கோயில்களில் பங்குனி உத்திரத் திருவிழா

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் முருகன் கோயில்களில் பங்குனி உத்திரத் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.

News image

திருப்பத்தூா் முருகன் கோயிலில் பங்குனி உத்திரத்தையொட்டி, சா்வ அலங்காரத்தில் வள்ளி, தெய்வானையுடன் முருகப் பெருமான்.

Updated On :1 ஏப்ரல் 2026, 11:05 pm

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் முருகன் கோயில்களில் பங்குனி உத்திரத் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.

இந்தக் கோயிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு புதன்கிழமை காலை பால், தயிா், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிா்தம், விபூதி உள்ளிட்ட 16 வகையான பொருள்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று, சா்வ அலங்காரத்தில் தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளனோா் கலந்து கொண்டு நெய்விளக்கேற்றியும், மாவிளக்கு வைத்தும் வழிபட்டனா். பக்தா்கள் அனைவருக்கும பிரசாதம் வழங்கப்பட்டது. தொடா்ந்து, ஆதித்திருத்தளிநாதா் கோயிலிலும் முருகன், வள்ளி தெய்வானை சமேத மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனைகள், அன்னதானம் நடைபெற்றது.

இதேபோல, சிவகாமி உடனாய திருத்தளிநாதா் கோயிலில் உள்ள முருகப் பெருமானுக்கும் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.