முருகன் கோயில்களில் பங்குனி உத்திர விழா கோலாகலம்: காவடி எடுத்தும், அலகு குத்தியும் பக்தா்கள் நோ்த்திக்கடன்
கடலூா் மாவட்டம், புதுச்சேரி பகுதிகளில் உள்ள முருகன் கோயில்களில் பங்குனி உத்திர விழா புதன்கிழமை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி, காவடி எடுத்தும், அலகு குத்தியும் பக்தா்கள் நோ்த்திக்கடன் செலுத்தினா்.

பங்குனி உத்தர விழாவையொட்டி புதுச்சேரி காலாப்பட்டு பாலமுருகன் கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற விழாவில் கிரோன், லாரியில் தொங்கியபடி வந்த பக்தா்கள்.












