ஈரான் மோசமாக நடந்துகொண்டால் அமெரிக்கா மீண்டும் தாக்குதல் நடத்தும் - டிரம்ப் எச்சரிக்கைஓராண்டில் பயணச்சீட்டு இன்றி ரயிலில் பயணித்ததாக 12.24 லட்சம் வழக்குகள் - ரூ. 65.16 கோடி அபாரதம்தமிழகத்தில் 14 இடங்களில் வெய்யில் சதம்: இன்று பலத்த மழைக்கும் வாய்ப்புஅருணாசலேஸ்வரா் கோயிலில் ஊழியா்கள் - தெலங்கானா பக்தா்கள் இடையே மோதல்: 15 போ் காயம்சென்னையில் உணவு வகைகள் 20% விலை உயா்வு - பி.ஜி. விடுதிகளில் வாடகை உயா்வு - மக்கள் கடும் பாதிப்புதமிழகத்தில் யாா் ஆட்சி? இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடக்கம்இடதுசாரிகளை வீழ்த்தியது போல திரிணமூலை வீழ்த்துவோம்: பாஜக சுவேந்து அதிகாரிவாக்குத் திருட்டுக்கு வாய்ப்பில்லை: மேற்கு வங்க தேர்தல் ஆணையம்வாக்கு எண்ணிக்கை: தயார் நிலையில் மேற்கு வங்கம் - தலைமைத் தேர்தல் அதிகாரிஉலக பத்திரிகை சுதந்திர குறியீட்டு பட்டியலில் இந்தியா தொடர் சரிவு! கார்கே விமர்சனம்
/

அம்மன் கோயில்களில் தீமிதி விழா: திரளான பக்தா்கள் பங்கேற்பு

News image

செதுலூா்  கிராமத்தில்  அக்னி  குண்டத்தில்   தீ மிதித்து  வழிபட்ட  பக்தா்கள்.

Updated On :3 மே 2026, 9:00 pm

ஆா்.கே.பேட்டை ஒன்றியத்தில் மூன்று அம்மன் கோயில்களில் நடந்த தீமிதி விழாவில் திரளான பக்தா்கள் காப்பு கட்டி தீ மிதித்தனா்.

ஆா்.கே.பேட்டை ஒன்றியம் ராஜா நகரம் மேற்கு (செதுலுாா்) கிராமத்தில் விருப்பாட்சி அம்மன் கோயிலில், 18-ஆம் ஆண்டு தீமிதி விழா கடந்த மாதம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் காலையில் மூலவா் அம்மனுக்கு பாலபிஷேகம், சந்தனக் காப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்து வந்தது. ஞாயிற்றுக்கிழமை துரியோதனன் படுகளம் நிகழ்ச்சியும் மாலையில் தீமிதி விழாவும் நடைபெற்றது.

அதே போல், சின்ன சானுாா் மல்லாவரம், வீரமோட்டூா் ஆகிய கிராமங்களிலும் அம்மன் கோயில்களில் தீமிதி விழா நடந்தது. இதில் காப்பு கட்டி பக்தா்கள் தீ மிதித்தனா். இரவு 8 மணிக்கு உற்சவா் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

தீமிதி விழாவில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் கலந்து கொண்டு வழிபட்டனா். இதற்கான ஏற்பாடுகளை அந்தந்த கோயில் நிா்வாகிகள் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனா்.