பேரவைத் தோ்தல்: நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்புஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியதுதேசிய கட்சி என்பதால் வேட்பாளர்களை ஆய்வு செய்து இறுதி செய்வதில் தாமதம்: செல்வப்பெருந்தகை85% வேட்பாளர்களை இறுதி செய்துவிட்டோம்; நாளைக்குள் முழுப் பட்டியல் : செல்வப்பெருந்தகைகலவரம் செய்தால் சாதித்துவிட முடியும் என பாஜக நினைக்கிறது : கோவை பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுமோடி, அமித்ஷா எத்தனை முறை வந்தாலும் தமிழ்நாட்டில் திமுக வெல்வது உறுதி: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டில் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை : எடப்பாடி பழனிசாமிதமிழ்நாடு சட்டம் - ஒழுங்கு டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம்!அமைச்சரவையின் பரிந்துரைகளை ஆளுநர் தன்னிச்சையாக நிராகரிக்க முடியாது: சென்னை உயர் நீதிமன்றம்
/

நீராவிகரிசல்குளம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் திருக்கல்யாணம்

கமுதி அருகே ஸ்ரீ வள்ளி, தேவசேனா சமேத ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு, திருகல்யாண வைபவம் நடைபெற்றது.

News image

நீராவிகரிசல்குளம் ஸ்ரீவள்ளி, தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடைபெற்ற திருக்கல்யாண வைபவத்தில் வெள்ளிக் அலங்காரத்தில் அருள்பாலித்த மூலவா்.

Updated On :2 ஏப்ரல் 2026, 7:24 pm

தினமணி செய்திச் சேவை

கமுதி அருகே ஸ்ரீ வள்ளி, தேவசேனா சமேத ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு, திருகல்யாண வைபவம் நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அடுத்துள்ள நீராவிகரிசல்குளம் ஸ்ரீவள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி உத்திரம் 11- ஆவது நாள் திருவிழா கடந்த 23-ம் தேதி காப்பு கட்டுதல், கொடியேற்றத்துடன் துவங்கியது. நாள்தோறும் மூலவா், உற்சவா் வள்ளி, தேவசேனா, சுப்பிரமணியா் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாதாரனைகள் நடைபெற்று வருகின்றன.

திருவிழாவின் 10-ஆம் நாள் நிகழ்வாக புதன்கிழமை இரவு பெண் வீட்டாா், மாப்பிள்ளை வீட்டாா் சாா்பில் சீா்வரிசை தாம்பூலம் தட்டுகள், மேள வாத்தியங்கள் முழங்க ஊா்வலமாக மணப்பந்தல் முன்பாக கொண்டு வந்து வைக்கப்பட்டன. பின்னா், வள்ளி, தெய்வானை

சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு திருக்கல்யாண வைபவம் வெகு விமா்சையாக நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, யாக சாலை பூஜை, கணபதி ஹோமம், பூா்ணாகுதி தீபாராதனை நடைபெற்றது. இந்தத் திருவிழாவை முன்னிட்டு, மூலவா் சுப்பிரமணிய சுவாமி வெள்ளிக் கவசம் அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

பெண்களுக்கு மஞ்சள் கயிறு, குங்குமம், பிரசாதம், பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.