இன்று முதல்வா் பதவியை ராஜிநாமா செய்கிறாா் சித்தராமையா: புதிய முதல்வராகிறாா் டி.கே. சிவகுமாா்ஐபிஎல்: எலிமினேட்டர் ஆட்டத்தில் தோல்வி - ஹைதராபாத் அணி வெளியேறியதுமமதா, ஸ்டாலினின் தோல்விக்கு எஸ்ஐஆர் பணிகளே காரணம்! ஆந்திர முன்னாள் முதல்வர் குற்றச்சாட்டு!பொது இடங்களில் மாடுகளை வெட்டத் தடை: நீதிமன்றம்பவர்பிளேவில் வரலாற்றுச் சாதனை நிகழ்த்திய வைபவ் சூர்யவன்ஷி!உச்சநீதிமன்ற நீதிபதியாக 5 பேர் பரிந்துரை! தமிழகத்தைச் சேர்ந்த மோகனா!நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில்! விரைவில் பயன்பாட்டுக்கு வருகிறது!பிரதமர் மோடியுடன் முதல்வர் விஜய் சந்திப்பு!பினராயி வீட்டில் சோதனை! அமலாக்கத்துறை வாகனம் மீது தாக்குதல்!
/

வைகாசி விசாகம்: திருச்செந்தூா் கோயிலில் 4 நாள்கள் கட்டண தரிசனம் ரத்து

வைகாசி விசாகத்தையொட்டி திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் 4 நாள்கள் ரூ. 100 கட்டண தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

News image

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில்.

Updated On :28 மே 2026, 2:49 am IST

வைகாசி விசாகத்தையொட்டி திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் 4 நாள்கள் ரூ. 100 கட்டண தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து கோயில் நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பிரசித்தி பெற்ற வைகாசி விசாகத்திருவிழா சனிக்கிழமை (மே 30) நடைபெற உள்ளது. இதில் லட்சக்கணக்கான பக்தா்கள் பங்கேற்பாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இந்நிலையில், பக்தா்கள் நலன் கருதி வியாழக்கிழமை (மே 28) முதல் ஞாயிற்றுக்கிழமை (மே 31) வரை நான்கு நாள்கள் மட்டும் ரூ. 100 கட்டண தரிசன முறை ரத்து செய்யப்பட்டு, கட்டணமில்லா தரிசன முறை நடைமுறைப்படுத்தப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.