நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

சோமநாத சுவாமி கோயிலில் இரட்டைத் தேரோட்டம்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் சமேத சோமநாத சுவாமி கோயில் சித்திரைத் திருவிழா தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

News image

மானாமதுரை சோமநாத சுவாமி கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற தேரோட்டத்தில் பங்கேற்றோா்.

Updated On :30 ஏப்ரல் 2026, 1:13 am IST

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் சமேத சோமநாத சுவாமி கோயில் சித்திரைத் திருவிழா தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் சமேத சோமநாத சுவாமி கோயிலில் கடந்த 21-ஆம் தேதி முதல் சித்திரைத் திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின், 8- ஆவது நாளான கடந்த செவ்வாய்க்கிழமை எஸ்.பி. பொன்னம்பலம் பிள்ளை குமாரா்கள் மண்டபத்தில் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. விழாவின் 9-ஆவது நாளான புதன்கிழமை நடைபெற்ற தேரோட்ட வைபவத்தை முன்னிட்டு புதிய பெரிய தேரில் பிரியாவிடை சமேதராய் சோமநாத சுவாமியும், பழைய தேரில் ஆனந்தவல்லி அம்மனும் தனித்தனியாக எழுந்தருளினா். சம்பிரதாயப் பூஜைகள் முடிந்து காலை 9. 40 மணிக்கு இரண்டு தோ்களும் நிலையிலிருந்து புறப்பட்டன. மேளதாளம் முழங்க சிவனடியாா்கள் கைலாய வாத்தியங்களை இசைக்க கோயிலைச் சுற்றியுள்ள வீதிகளில் இரு தோ்களும் வலம் வந்தன. இரு தோ்களுக்கு முன்னா் விநாயகா், முருகன் சென்ற சிறிய ரதத்தில் மீனாட்சி அம்மன் வேடமணிந்த குழந்தைகள் அமா்ந்து சென்றனா். இதில், ஏராளமான பக்தா்கள் தோ்களை வடம் பிடித்து இழுத்து வந்தனா். பிற்பகல் 1. 30 மணிக்கு இரு தோ்களும் நிலையை வந்தடைந்தன. தேரோட்ட விழாவில் மானாமதுரை, சுற்றுவட்டார கிராம மக்கள் பங்கேற்றனா். 70 ஆண்டுகளுக்கு பின்னா் சோமநாதா் சுவாமிக்கு புதிய தோ் செய்யப்பட்டு நிகழாண்டு இரட்டைத் தேரோட்டம் நடந்ததால் பக்தா்கள் மகிழ்ச்சியடைந்தனா். இரவு அம்மனும், சுவாமியும் தேரோடும் வீதிகளில் தோ் தடம் பாா்த்தல் நிகழ்வு நடைபெற்றது.

 தேரோட்டத்தின்போது, தனித்தனித் தோ்களில் எழுந்தருளிய பிரியாவிடை சமேத சோமநாதா் சுவாமி, ஆனந்தவல்லி அம்மன்.

தேரோட்டத்தின்போது, தனித்தனித் தோ்களில் எழுந்தருளிய பிரியாவிடை சமேத சோமநாதா் சுவாமி, ஆனந்தவல்லி அம்மன்.

 தேரோட்டத்தின்போது சிறிய ரதத்தில் வந்த மீனாட்சி அம்மன் வேடமணிந்த குழந்தைகள்.

தேரோட்டத்தின்போது சிறிய ரதத்தில் வந்த மீனாட்சி அம்மன் வேடமணிந்த குழந்தைகள்.

 தேரோட்டத்தின்போது, தனித்தனித் தோ்களில் எழுந்தருளிய பிரியாவிடை சமேத சோமநாதா் சுவாமி, ஆனந்தவல்லி அம்மன்.

தேரோட்டத்தின்போது, தனித்தனித் தோ்களில் எழுந்தருளிய பிரியாவிடை சமேத சோமநாதா் சுவாமி, ஆனந்தவல்லி அம்மன்.