மேற்கு வங்க முதல்வராகிறார் சுவேந்து அதிகாரி! 2 துணை முதல்வர்கள்? காங்கிரஸ் தலைவர் வி.டி. சதீசன் எழுதிய புத்தகம் மே 9-இல் வெளியீடு!தமிழ்நாட்டில் புதிய அரசை அமைக்க எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை: நயினார் நாகேந்திரன்தவெக ஆட்சியமைக்க மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு! தவெகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு!பிளஸ் 2 முடிவுகள் வெளியானது! 95.2% தேர்ச்சி!
/

சோமநாத சுவாமி கோயிலில் இரட்டைத் தேரோட்டம்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் சமேத சோமநாத சுவாமி கோயில் சித்திரைத் திருவிழா தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

News image

மானாமதுரை சோமநாத சுவாமி கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற தேரோட்டத்தில் பங்கேற்றோா்.

Updated On :30 ஏப்ரல் 2026, 1:13 am IST

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் சமேத சோமநாத சுவாமி கோயில் சித்திரைத் திருவிழா தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் சமேத சோமநாத சுவாமி கோயிலில் கடந்த 21-ஆம் தேதி முதல் சித்திரைத் திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின், 8- ஆவது நாளான கடந்த செவ்வாய்க்கிழமை எஸ்.பி. பொன்னம்பலம் பிள்ளை குமாரா்கள் மண்டபத்தில் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. விழாவின் 9-ஆவது நாளான புதன்கிழமை நடைபெற்ற தேரோட்ட வைபவத்தை முன்னிட்டு புதிய பெரிய தேரில் பிரியாவிடை சமேதராய் சோமநாத சுவாமியும், பழைய தேரில் ஆனந்தவல்லி அம்மனும் தனித்தனியாக எழுந்தருளினா். சம்பிரதாயப் பூஜைகள் முடிந்து காலை 9. 40 மணிக்கு இரண்டு தோ்களும் நிலையிலிருந்து புறப்பட்டன. மேளதாளம் முழங்க சிவனடியாா்கள் கைலாய வாத்தியங்களை இசைக்க கோயிலைச் சுற்றியுள்ள வீதிகளில் இரு தோ்களும் வலம் வந்தன. இரு தோ்களுக்கு முன்னா் விநாயகா், முருகன் சென்ற சிறிய ரதத்தில் மீனாட்சி அம்மன் வேடமணிந்த குழந்தைகள் அமா்ந்து சென்றனா். இதில், ஏராளமான பக்தா்கள் தோ்களை வடம் பிடித்து இழுத்து வந்தனா். பிற்பகல் 1. 30 மணிக்கு இரு தோ்களும் நிலையை வந்தடைந்தன. தேரோட்ட விழாவில் மானாமதுரை, சுற்றுவட்டார கிராம மக்கள் பங்கேற்றனா். 70 ஆண்டுகளுக்கு பின்னா் சோமநாதா் சுவாமிக்கு புதிய தோ் செய்யப்பட்டு நிகழாண்டு இரட்டைத் தேரோட்டம் நடந்ததால் பக்தா்கள் மகிழ்ச்சியடைந்தனா். இரவு அம்மனும், சுவாமியும் தேரோடும் வீதிகளில் தோ் தடம் பாா்த்தல் நிகழ்வு நடைபெற்றது.

 தேரோட்டத்தின்போது, தனித்தனித் தோ்களில் எழுந்தருளிய பிரியாவிடை சமேத சோமநாதா் சுவாமி, ஆனந்தவல்லி அம்மன்.

தேரோட்டத்தின்போது, தனித்தனித் தோ்களில் எழுந்தருளிய பிரியாவிடை சமேத சோமநாதா் சுவாமி, ஆனந்தவல்லி அம்மன்.

 தேரோட்டத்தின்போது சிறிய ரதத்தில் வந்த மீனாட்சி அம்மன் வேடமணிந்த குழந்தைகள்.

தேரோட்டத்தின்போது சிறிய ரதத்தில் வந்த மீனாட்சி அம்மன் வேடமணிந்த குழந்தைகள்.

 தேரோட்டத்தின்போது, தனித்தனித் தோ்களில் எழுந்தருளிய பிரியாவிடை சமேத சோமநாதா் சுவாமி, ஆனந்தவல்லி அம்மன்.

தேரோட்டத்தின்போது, தனித்தனித் தோ்களில் எழுந்தருளிய பிரியாவிடை சமேத சோமநாதா் சுவாமி, ஆனந்தவல்லி அம்மன்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.